search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவீன் பட்னாயிக்"

    ஒடிசா மாநிலத்தின் பல பகுதிகளில் அக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அம்மாநில முதல்மந்திரி நவீன் பட்னாயிக் உத்தரவிட்டுள்ளார். #BanPlastic #Odisha
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநில முதல்மந்திரி நவீன் பட்னாயிக் காணொளி காட்சி மூலம் மக்களிடம் நேரடியாக இன்று உரையாடினார். அந்த உரையாடலின் போது, அடுத்த 2 ஆண்டுகளில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக ஒடிசாவை உருவாக்குவதற்காக ஒடிசாவின் பல பகுதிகளில் பிளாஸ்டிக்கை தடை செய்வதாக அறிவித்துள்ளார்.

    இந்த அறிவிப்பு அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், புவனேஸ்வர், கட்டாக், பெர்காம்பூர், சாமல்பூர், ரோர்கெலா, பூரி நகர், மற்றும் நகராட்சி பகுதிகளிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய முதல்மந்திரி பட்னாயிக், அனைவரும் வீடுகளில் மரக்கன்று நடுமாறும், அதன்மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறும் கூறியுள்ளார்.

    பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் உபயோகம் குறித்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் எனவும் முதல்மந்திரி நவீன் பட்னாயிக் மக்களுடனான காணொளி உரையாடலில் தெரிவித்துள்ளார். #BanPlastic #Odisha
    ×