search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகா மக்கள் முன்னணி"

    மணிப்பூரில் பா.ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற நாகா மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    இம்பால்:

    நாகா மக்கள் முன்னணி கட்சியில் கடந்த சில நாட்களாகவே பல குழப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. நாகாலாந்தில் கட்சிக்குள் நிகழும் பிரச்சினைகளுக்கு பா.ஜனதா தான் காரணம் என்று நாகா மக்கள் முன்னணி கூறி வருகிறது.

    மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபை இடங்கள் உள்ளன. கடந்த 2017-ல் நடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் 28 இடங்களை பெற்றது. இருப்பினும் 21 இடங்களை பெற்ற பா.ஜனதா, 4 இடங்களை பிடித்த நாகா மக்கள் முன்னணி மற்றும் தலா ஒரு இடங்களை வென்ற எல்.ஜே.பி., சுயேட்சை, ஏ.ஐ.டி.சி கட்சிகள் ஆதரவு அளித்து வந்தது. முதல்வராக பா.ஜனதாவை சேர்ந்த என்.பிரேன்சிங் முதல்வாராக பதவி வகித்து வருகிறார்.

    நாகா மக்கள் முன்னணி, மக்களவைத் தேர்தலில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சிக்கு ஆதரவு பிரசாரம் மேற்கொண்டதாக 7 சட்டப்பேரவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது. அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான மனுவையும் சபாநாயகரிடம் அளித்தது. அதேசமயம், 7 சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கட்சித் தலைவர்களும் ராஜினாமா செய்தனர்.

    இந்நிலையில் நாகலாந்து மாநிலம் கோஹிமாவில் நடைபெற்ற நாகா மக்கள் முன்னணி கூட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜனதா அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஆட்சி அமைத்தது முதல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், தங்கள் கட்சிக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும் நாகா மக்கள் முன்னணி மாநில தலைவரான அவாங்போநெவ்மாய் கூறியுள்ளார்.
    நாகலாந்து மாநில பாராளுமன்ற இடைத்தேர்தலில் நாகா மக்கள் முன்னணி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் கட்சி முன்வந்துள்ளது. #NagalandLSbypoll
    கோஹிமா:

    நாகலாந்து மாநிலத்தின் முதல் மந்திரியாக தேசியவாத குடியரசு முன்னேற்ற கட்சி தலைவர் நெய்பியூ ரியூ சமீபத்தில் பொறுப்பேற்றதை தொடர்ந்து அவர் முன்னர் எம்.பி.யாக பதவிவகித்த லோனே பாராளுமன்ற தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் ஆளும் தேசியவாத குடியரசு முன்னேற்ற கட்சி, பா.ஜ.க. கூட்டணி சார்பில் மாநில முன்னாள் மந்திரி டோக்கேஹோ எப்தோமி போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சியான நாகா மக்கள் முன்னணி சார்பில் அபோக் ஜமிர் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.


    இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் போட்டியில் இருந்து விலகி கொண்ட காங்கிரஸ் கட்சி நாகா மக்கள் முன்னணி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. இதற்கான அறிவிப்பை நாகலாந்து மாநில காங்கிரஸ் தலைவர் தேரி வெளியிட்டுள்ளார்.

    மதவாத சக்திகளிடம் நாகலாந்தை மீட்பதற்காக கட்சி மேலிடம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். #NagalandLSbypoll #CongressbackNPFcandidate
    ×