என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
நீங்கள் தேடியது "நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்"
நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கு தமிழில் தேர்வெழுத அனுமதி வழங்க வேண்டும். யு.ஜி.சி.யை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்யா, தூத்துக்குடி சுரேஷ், சுப்புலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் மாரியப்பன் கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தின் போது பல்கலைக்கழகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து பாதுகாப்பிற்காக அங்கு ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மாணவர்கள் ரோட்டிலேயே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். இதன்பிறகு மாணவர் தரப்பினரிடம் துணைவேந்தர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக பல்கலைக்கழக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கு தமிழில் தேர்வெழுத அனுமதி வழங்க வேண்டும். யு.ஜி.சி.யை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்யா, தூத்துக்குடி சுரேஷ், சுப்புலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் மாரியப்பன் கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தின் போது பல்கலைக்கழகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து பாதுகாப்பிற்காக அங்கு ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மாணவர்கள் ரோட்டிலேயே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். இதன்பிறகு மாணவர் தரப்பினரிடம் துணைவேந்தர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக பல்கலைக்கழக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X