என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பட்டதாரி பெண் காதலனுடன் திருமணம்"
புதுச்சேரி:
வில்லியனூர் பெரியபேட் பால்வாடி தெருவை சேர்ந்தவர் முனுசாமி. ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தினக்கூலி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் விஷ்ணுபிரியா (வயது24). இவர் பி.காம். படித்து முடித்து தற்போது சி.ஏ. படித்து வந்தார். இந்த நிலையில் சம் பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறிய விஷ்ணுபிரியா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எங்கும் விஷ்ணுபிரியா இல்லை.
இதையடுத்து முனுசாமி தனது மகள் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் வினாயகம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விஷ்ணுபிரியா தனது உறவினர் மகனான புவியரசன் (27) என்பவரை காதலித்து வந்ததும் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரின் பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்