என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலீசை திணறடிக்கும் வாலிபர்"
பாகூர்:
பாகூர் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயயது 35). இவர் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் அடிக்கடி வீண் தகராறு செய்து அவர்களை தாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அவரை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்திய போது சுவற்றில் மோதிக் கொண்டும், போலீஸ் நிலையத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றும் பிரபு மிரட்டி வந்ததால் அவரை போலீசார் கைது செய்யாமல் விடுவித்து வந்தனர்.
அது போல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாகூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயவேலு (45). என்பவரிடம் பிரபு வீண் தகராறு செய்து அவரை கையாலும், தடியாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜெயவேலு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார்.
ஆனால், போலீசார் வழக்குபதிவு செய்தும் பிரபுவை இதுவரை கைது செய்யவில்லை. கைது செய்தால் போலீஸ் நிலையத்தில் தற்கொலை செய்து கொள்வேன் என்று பிரபு மிரட்டுவதால் அவரை கைது செய்ய முடியாமல் போலீசார் தவி(ர்)த்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்