என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » போலீஸ் தலைமையக ஊழியர்
நீங்கள் தேடியது "போலீஸ் தலைமையக ஊழியர்"
மாயமான போலீஸ் தலைமையக ஊழியர் திருமணம் ஆகாத விரக்தியில் தான் மாயமாகி இருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை நைனார் மண்டபம் மூகாம்பிகை நகர் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 65). இவரது மகன் சூரியசந்திரகுமார் (30), அரசு ஊழியரான இவர், போலீஸ் தலைமையகத்தில் முதுநிலை எழுத்தராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பணிபுரிந்த இடத்தில் இருந்து கடந்த 4-ந் தேதி சூரியசந்திரகுமார் வேலைக்கு சென்றார். ஆனால், மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் சூரிய சந்திரகுமார் தனது அப்பா ராமசாமிக்கு சிதம்பரத்தில் இருந்து போன் செய்தார். அப்போது தனக்கு வேலை பார்க்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதுகுறித்து ராமமூர்த்தி பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து போலீசார் சிதம்பரம், திருக்கடையூர், வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கு சென்று தேடி வந்தனர். அங்கும் இல்லை. மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில் சூர்யசந்திரகுமார் வீட்டினர் 50-க்கும் மேற்பட்ட இடத்தில் பெண் பார்த்துள்ளனர். ஆனால், ஒன்றுமே அமையவில்லை. மேலும் அவரது நண்பர்கள் உனக்கு எப்போது திருமணம் ஆகும்? என அடிக்கடி கேட்டுள்ளனர்.
இதனால் தனக்கு திருமணம் ஆகவில்லையே? என்ற விரக்தியில் இருந்துள்ளார்.
இதன் காரணமாகதான் அவர் மாயமாகி இருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
புதுவை நைனார் மண்டபம் மூகாம்பிகை நகர் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 65). இவரது மகன் சூரியசந்திரகுமார் (30), அரசு ஊழியரான இவர், போலீஸ் தலைமையகத்தில் முதுநிலை எழுத்தராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பணிபுரிந்த இடத்தில் இருந்து கடந்த 4-ந் தேதி சூரியசந்திரகுமார் வேலைக்கு சென்றார். ஆனால், மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் சூரிய சந்திரகுமார் தனது அப்பா ராமசாமிக்கு சிதம்பரத்தில் இருந்து போன் செய்தார். அப்போது தனக்கு வேலை பார்க்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதுகுறித்து ராமமூர்த்தி பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து போலீசார் சிதம்பரம், திருக்கடையூர், வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கு சென்று தேடி வந்தனர். அங்கும் இல்லை. மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில் சூர்யசந்திரகுமார் வீட்டினர் 50-க்கும் மேற்பட்ட இடத்தில் பெண் பார்த்துள்ளனர். ஆனால், ஒன்றுமே அமையவில்லை. மேலும் அவரது நண்பர்கள் உனக்கு எப்போது திருமணம் ஆகும்? என அடிக்கடி கேட்டுள்ளனர்.
இதனால் தனக்கு திருமணம் ஆகவில்லையே? என்ற விரக்தியில் இருந்துள்ளார்.
இதன் காரணமாகதான் அவர் மாயமாகி இருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X