search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணல் திருட்டு"

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றின் இருபுறமும் சாலைகள் அமைத்து மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆறு மணல் வளம் மிகுந்த பகுதி ஆகும். பல ஆண்டுகள் முன்பே மணல் குவாரி அமைக்கப்பட்டதால் தற்போது மணல் வளம் மறைந்து ஆறு முழுவதும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் மணல் குவாரி அமைக்க நடவ டிக்கை எடுத்த போது பொதுமக்கள், விவசாயிகள் எதிர்ப்பால் மணல் குவாரி அமைக்கப்படவில்லை.

    15 ஆண்டுகளுக்கு முன்பு பணி புரிந்த சிவகங்கை மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணன் மானாமதுரையில் உள்ள வைகை ஆறு முழுவதையும் சீரமைத்து கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார்.

    அதன் பின்னர் எந்த கலெக்டரும் வைகை ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் தடுப்பனை அமைத்தும் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய ஏதுவாக ஆற்றங்கரைகளில் சாலை அமைக்க திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    ஆனால் தடுப்பணை மட்டும் தான் அமைக்கப்பட்டது. சாலை அமைக்கப்படவில்லை. மானாமதுரை வைகை ஆற்று தடுப்பு அணைக்கு பின்பு ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மற்றும் திருப்புவனம் பகுதியில் இரு இடங்களில் அமைக்கப்பட்ட தடுப்பணைகளில் ஆற்றின் இரு கரைகளிலும் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் மானாமதுரையில் அமைக்கப்படவில்லை.

    தற்போது வைகை ஆற்று பகுதியில் தலைச்சுமையாக அதிக அளவு மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதையும் பொதுப்பணித்துறையால் தடுக்க முடியவில்லை.

    வைகை ஆறு முழுவதும் கருவேல மரங்களால் சூழப்பட்டதால் தனியாக செல்ல முடியவில்லை. பொதுமக்கள் நடை பயிற்சி செய்ய மைதானம் ஏதும் மானாமதுரையில் கிடையாது.

    அதனால் வைகை ஆறு பாலத்தை கடந்து 4 வழிச்சாலை மற்றும் புதிய புறவழிச்சாலையில் செல்லும் நிலை உள்ளது.

    கடந்த 26-ந் தேதி சாலை வழியே சென்ற அ.ம.மு.க. நிர்வாகி சரவணன் ஓட ஓட வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். வைகை ஆற்றுக்குள் செல்ல முடியாமல் கருவேல மரங்கள் இருந்ததால் தப்ப முடியாமல் இறந்தார்.

    இதே போல் வைகை ஆற்று புதிய பாலத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வழிப்பறி கொள்ளையும் அடிக்கடி நடைபெறுகிறது. இதையும் தடுக்க முடியவில்லை. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதியாக வைகை ஆறு மாறி வருகிறது.

    பொதுமக்கள் பாதுகாப்பாக நடைபயிற்சி செய்ய மானாமதுரை ரெயில் பாலத்தில் இருந்து புதிதாக அமைக்கப்பட்ட தடுப்பணை வரை ஆற்றின் இருகரைகளிலும் சாலை வசதி அமைக்க வேண்டும்.

    மணல் திருட்டு தடுக்கப்பட வேண்டும். புதிய புறவழி சாலை பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும். வைகை ஆறு முழுவதும் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மானாமதுரை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலூர் அருகே சட்ட விரோதமாக மணல் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் உள்ள கண்மாய் மற்றும் குளங்கள், வைகை ஆற்றுப் பகுதிகளில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக மணல் திருடப்பட்டு வருகிறது. இதை தடுக்க அதிகாரிகளும், போலீசாரும் நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை.

    இந்த நிலையில் மேலூர் அருகே தும்பைப்பட்டியை அடுத்துள்ள சலாக்கிபட்டி, வேடார்குளம் கண்மாயில் அடிக்கடி சட்ட விரோதமாக மணல் திருடி கடத்தப்படுவதாக போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் புகார்கள் வந்தன.

    இதையடுத்து மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசு மற்றும் போலீசார் அந்தப்பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது கண்மாயில் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த கும்பல், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்ப முயன்றது. ஆனால் போலீசார் விரைந்து செயல்பட்டு மணல் திருட்டு கும்பலை பிடித்தனர்.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் மணல் திருட்டில் ஈடுபட்டது மேலூர் சூரக்குண்டுவைச் சேர்ந்த கதிரேசன் (28), சிங்கம்புணரி பிரபாகரன் (31), மேலூர் முகமதியாபுரத்தைச் சேர்ந்த அப்துல் சலாம் (56),கரையான்பட்டி ரவிச்சந்திரன் (53) என தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 லாரிகள், ஒரு ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன.

    கமுதி பகுதிகளில் மணல் திருட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கமுதி:

    கமுதி மண்டல மாணிக்கம், பெருநாழி, பேரையூர், அ.நெடுஞ்குளம், அபிராமம் உள்பட பல பகுதிகளில் மணல் திருட்டு அதிக அளவில் நடந்து வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் குவாரிகள் இல்லாததால் கட்டுமானப்பணி உள்பட பல பணிகளுக்கு மணல் இல்லாமல் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    லாரி மற்றும் டிப்பர் லாரிகளில் 3 யூனிட் மணல் ரூ.28 ஆயிரத்துக்கு திருட்டுத்தனமாக இரவோடு, இரவாக கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    குறிப்பாக கமுதி, அபிராமம் பகுதிகளில் குண்டாறு, மலட்டாறு, பரளையாறு படுகையிலும், கிருதுமால் நதியிலும் மணல் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    அரசு தனியார் கட்டுமான பணிகளுக்கான இரவு நேரங்களில் வேன், டிராக்டர் ஆட்டோ, கார், லாரி ஆகிய வாகனங்களில் மணல் கடத்தப்படுகிறது.

    கமுதி அருகே “எம்.சாண்ட்” மணல் பெர்மிட் பெற்றுக் கொண்டு ஆற்றுப் பகுதிகளில் இருந்து ஆற்று மணல் கடத்தி வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

    விவசாய நிலங்களும், ஆறுகள், கண்மாய்களிலும் எவ்வித அனுமதியின்றி வாகனங்களில் மணல் கடத்தப்படுகிறது.

    மண்டலமாணிக்கம், விலையபூக்குளம், புதுக்குளம், புதுப்பட்டி, ம.பச்சேரி, புத்துருத்தி, காக்குடி, அபிராமம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குண்டாறு, பரளையாறு, கிருதுமால் நதி ஆற்று படுகையில் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து காணப்படுகிறது.

    இதனால் அத்தியாவசிய தேவைக்கான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதிய மழை இல்லாமலும் ஆற்றுப்படுகையில் மணல் திருடப்படுவதாலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக அதிகாரிகள் மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் சார்பில் அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மீஞ்சூர் அருகே ஆற்றின் கரையை உடைத்து மணல் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த சீமாவரம் ஆற்றில் ஆற்றின்கரையை உடைத்து ஆற்றுப்பாலத்தின் அடியில் மணல் எடுப்பதாக மீஞ்சூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது ஜே.சி.பி. எந்திரம் மூலம் மர்ம நபர்கள் மணல் அள்ளிகொண்டிருப்பது தெரியவந்தது.

    போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதில் ஒருவரை மட்டும் மடக்கினர்.

    விசாரணையில் அவர் பொன்னேரி அடுத்த சோமஞ்சேரியைச் சேர்ந்த நாகராஜ் (26) என்பது தெரிந்தது. அவரை சிறையில் அடைத்தனர்.

    தப்பி ஓடிய மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரையை சேர்ந்த சிவகுமாரை போலீசார் தேடி வருகின்றனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆண்டிப்பட்டி அருகே மாட்டு வண்டியில் மணல் திருடியவர்களை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி பகுதியில் வைகை ஆற்றில் மணல் திருடுவது வாடிக்கையாக கொண்டுள்ளனர். போலீசார் அவ்வப்போது அவர்களை பிடித்து அபராதம் விதித்தபோதும் மணல் திட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    இதனால் வைகையாற்று பகுதியை சுற்றியுள்ள ஊர்களில் நீர் ஆதாரம் குறைவதோடும், மண் வளம் சுரண்டப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் அடிக்கடி புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    க.விலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் வைகை ஆற்றுப்பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அமச்சியாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கருப்பசாமி (வயது24) மற்றும் மீராரு (28) மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து மணல் கடத்திய மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து அவர்களையும் கைது செய்தனர்.

    பழனி அருகே ஆற்றுப்படுகையில் மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பழனி:

    பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடியில் இருந்து வரதமாநதி செல்லும் பாதையில் சட்டப்பாறை ஆற்றுப்படுகையில் மணல் திருடப்படுவதாக ஆயக்குடி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது பழைய ஆயக்குடி 6-வது வார்டைச் சேர்ந்த அருண்குமார் (வயது 25) என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் மணல் திருடி கடத்த முயன்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து அருண் குமாரையும், டிராக்டரை ஓட்டி வந்த 4-வது வார்டு பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (33) என்பவரையும் கைது செய்து டிராக்டரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி வெள்ளாற்று பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்து ரகசிய இடத்தில் சேமிக்கின்றனர். பின்னர் அதனை லாரிகள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு கடத்தி செல்கின்றனர். அதே போன்று முள்ளுக்குறிச்சியில் இருந்து 2 டாரஸ் லாரிகளில் மணல் ஏற்றி ஆலத்தியூர் சிமெண்ட் ஆலை வாயில் அருகே வந்துகொண்டு இருந்தது. 

    அப்போது தளவாய் போலீசார் அந்த இரண்டு லாரிகளையும்  மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில் ஆற்று மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தளவாய் போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 லாரிகளையும் கைப்பற்றியதோடு லாரியை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த சபரிநாதன்,  முருகேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மணல் கொள்ளை அதிகரித்து வருகிறது. #Sandtheft

    தேனி:

    கூடலூரில் தெற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் தலைமையில் கூடலூர்-குமுளி மெயின் ரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது குருவனூத்து முல்லைப் பெரியாறு வண்ணாந்துறை ஆற்றில் இருந்து பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டியன் (வயது 48) என்பவர் டிராக்டரில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த டிராக்டரின் உரிமையாளர் கூடலூர் கே.கே.காலனியைச் சேர்ந்த ஈஸ்வரன் (55) என்பதும் தெரிய வந்தது. போலீசார் மணல் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்து பாண்டியன் மற்றும் ஈஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர். பெரியகுளம் டி.கள்ளிப்பட்டி பகுதியில் தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதி யாசிகா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஓடைப் பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் மணல் திருடி வந்த முத்துப்பாண்டி (42) என்பவரை கைது செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். #Sandtheft

    வேளாங்கண்ணி அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் திருக்குவளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வேளாங்கண்ணி அருகே உள்ள முப்பத்திகோட்டகம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது 2 டிராக்டர்கள் மணல் ஏற்றி வந்து கொண்டிருந்தன. அவற்றை வழிமறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் முப்பத்திகோட்டகத்தில் உள்ள வெள்ளையாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து டிராக்டர்களை ஓட்டி வந்த கீழ்வேளூர் தாலுகா மோகனூர் கீழத்தெருவை சேர்ந்த ஜோதி மகன் தெட்சிணாமூர்த்தி (வயது32), திருப்பூண்டி வீரன் கோவில் தெருவை சேர்ந்த முத்தலீப் மகன் சாகுல்அமீது (32) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 
    தருமபுரி அருகே மணல் திருடிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் லாரியில் இருந்த மணல் உரிய அனுமதியில்லாமல் திருடிவந்த மணல் என தெரியவந்தது.

    இதுகுறித்து லாரி ஓட்டுநரை விசாரணை செய்ததில்  அவரது பெயர் கிருஷ்ணன் வயது (23) கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள கொப்பக்கரையை சேர்ந்தவர் என தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் மணல் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டதுடன் லாரி உரிமையாளர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டியில் மணல் திருடிய கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    போடி தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் தேவாரம் புதுக்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர் அப்போது அம்பரப்பர் மலை அடிவாரப்பகுதியில் இருந்து டிராக்டரில் மணல் திருடி வந்த டி.புதுக்கோட்டையைச் சேர்ந்த சிவக்குமார், ஊத்தம்பாறை ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போடி சிலமலை அருகே மணியம்பட்டி ஓடையில் இருந்து டிராக்டரில் மணல் அள்ளி வந்த முத்துப்பாண்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சின்னமனூர் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராகிம் தலைமையிலான போலீசார் துரைசாமிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது டிராக்டரில் மணல் திருடி வந்த கூலையனூரைச் சேர்ந்த முத்துப்பாண்டி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கண்டமனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் பாட்ஷா தலைமையில் போலீசார் ஆற்றுக்கால் வைகை ஆற்றுப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது வைகை ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் எடுத்து வந்த அமச்சியாபுரத்தைச் சேர்ந்த தர்மலிங்கம், அய்யனார்புரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த முத்தையா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து மணல் திருடி வந்த டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தொண்டி அருகே மணல் திருடியது தொடர்பாக 6 பேரை கைது செய்த போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    தொண்டி:

    தொண்டி அருகே செக்காந்திடல் பகுதியில் சிலர் மணல் அள்ளுவதாக வி.ஏ.ஓ. பழனிச்சாமி தகவல் கொடுத்தார். இதன் அடிப்படையில் ராமநாதபுரம் அதிவிரைவுப்படை போலீசார், தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்சாமி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    செக்காந்திடல் பகுதியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த சிறுநல்லூரைச் சேர்ந்த செந்தில் முருகன்(வயது30) டிப்பர் லாரி டிரைவர்கள், கருங்காவயலைச் சேர்ந்த முனியராஜ்(32), தெற்கு ஊரணிங்குடியைச் சேர்ந்த நவீன்குமார் (18), மாதவனூர் ராஜமருது(19),சிறுவாளுர் அன்புகமல்(30), உசிலனக் கோட்டை ஆனந்த் (28), கோவிந்தமங்களம் நாகேந்திரன், கீழ்குடியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மணல் அள்ள பயன்படுத்திய 2 டிப்பர் லாரி, 2 டிராக்டர், 2 ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
    ×