என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மண்பாண்ட தொழிலாளர்கள்"
சென்னை:
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் மாவட்ட மாநாடு காஞ்சீபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சேம.நாராயணன் தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டு மண்ணிலான கைவினை பொருட்கள் கண்காட்சியை திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருக்கும் தொழிலாளர்கள் 760 பேருக்கு இலவச மின்சக்கரம், ஓய்வூதியம், நிவாரண உதவிகள், கல்விக் கடன் உள்பட சுமார் ரூ.42 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழா மலரையும் வெளியிட்டார்.
பின்னர் அமைச்சர் பெஞ்சமின் மாநாட்டில் பேசும் போது, மண்பாண்ட தொழிலாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து செயல்படுத்தியவர் ஜெயலலிதா.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், மாவட்டங்களில் மண்பாண்ட தொழில் செய்ய குளங்களில் மண் எடுப்பது, அனைத்து தொழிலாளர்களுக்கும் இலவச மின்சக்கரம் உள்பட 10 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை உடனடியாக அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வேன் என்றார்.
மாநாட்டில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, வாலாஜாபாத் கணேசன், ஆம் ஆத்மி கட்சி வசீகரன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இரா.கீதா, பழனி, ஹென்றி, சிட்டிபாபு, லீலாவதி குலாலர், சங்க நிர்வாகிகள் பாவலர் கணபதி, மகேஷ்கண்ணன், எஸ்.என். பழனி, மணி, பெருமாள் பத்தர், கவிஞர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். #ADMK
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்