search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை காளியம்மன்"

    தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் ஆனித்திருமஞ்சன திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனித்திருமஞ்சன திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 84-வது ஆண்டாக ஆனித்திருமஞ்சன திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை பக்தர்கள் தொட்டியம் காவிரி ஆற்றிக்கு சென்று நீராடி பால்குடம், தீர்த்தக்குடம், சந்தனக்குடம், அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தினர்.

    பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக தொட்டியம் மெயின் ரோடு, வளையல்காரத் தெரு, காந்தி ரோடு, வடக்கு ரதவீதி வழியாக கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். அதைத்தொடர்ந்து மதுரை காளியம்மனுக்கு தீர்த்தம், பால், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி திருநெல்வேலி அருகே உள்ள வீரவநல்லூர் மதுரைகாளியம்மன் வழிபாட்டு குழுவின் சார்பில் மதுரைகாளியம்மன் பற்றிய வில்லுப்பாட்டு சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை தொட்டியம் ஆனித்திருமஞ்சன விழாக்குழுவினர் செய்திருந்தனர். 
    ×