என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மத்திய அரசு உதவும்
நீங்கள் தேடியது "மத்திய அரசு உதவும்"
பஞ்சாப்பில் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் பாதிப்பு அடைந்தோருக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். #PunjabFloods #Modi
புதுடெல்லி:
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பல ஊர்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் ஆறுகளில் தண்ணீர் அபாய அளவை கடந்து பாய்கிறது. இதையடுத்து, பஞ்சாப்பில் ராணுவம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பஞ்சாப்பில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல் மந்திரி அமரிந்தர் சிங் பார்வையிட்டார். அதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் வீடு இழந்தோர் மற்றும் விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளேன். பாதிப்பு அடைந்தோருக்கு அரசு தேவையான நிவாரணங்களை அளிக்கும் என்றார்.
இந்நிலையில், பஞ்சாப் முதல்மந்திரி அமரிந்தர் சிங்கிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது வெள்ளப் பெருக்கில் பாதிப்பு அடைந்துள்ள மக்களுக்கும் மாநிலத்துக்கும் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என உறுதியளித்தார். #PunjabFloods #Modi
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X