search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்னார் வளைகுடா"

    கடலில் தொடர்ந்து 1300 மீட்டர் தொலைவுக்கு எக்ஸோகோடிடடே மீனால் பறக்க முடியும். இதன் வால் நிமிடத்திற்கு சுமார் 70 முறை வேகமாக அசைக்கக்கூடியது.
    கீழக்கரை:

    கீழக்கரை கடல் பகுதியில் முத்துராஜ் நகரைச் சேர்ந்த முரளி என்பவரின் வலையில் இறக்கைகளுடன் அரிய வகை சிறிய ரக மீன் சிக்கியது. வண்ணத்துப்பூச்சி போன்ற தோற்றத்தில் இறக்கைகளுடன் கூடிய இந்த வகை மீன் ‘எக்ஸோகோடிடடே’ என்ற குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கடல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதனை பறக்கும் மீன் என்றும் அழைக்கின்றனர்.

    அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடலில் இந்த மீன் அதிகம் காணப்படுகிறது. பொதுவாக மீன் நீந்துவதற்கு அதன் துடுப்புகளையே பயன்படுத்தும். இந்த மீன் அதைப் பறக்கவும் பயன்படுத்திக் கொள்வது சிறப்பாகும்.

    கடலில் தொடர்ந்து 1300 மீட்டர் தொலைவுக்கு எக்ஸோகோடிடடே மீனால் பறக்க முடியும். இதன் வால் நிமிடத்திற்கு சுமார் 70 முறை வேகமாக அசைக்கக்கூடியது. அதனால் உடலை சமநிலைப்படுத்தி தனது இறக்கையை விரித்து டால்பின் போல தண்ணீரில் இருந்து மேலே எழும்பிப் பறக்கிறது.

    நீரினுள் இருக்கும்போதே பறப்பதற்கு முன் வேகமெடுத்து, நீரின் மேற்பரப்பை நோக்கி இந்த மீன் நீந்தி வரும். நீர்பரப்பை அடைந்ததும் தன் துடுப்புகளை முழுவதும் விரித்துத் துள்ளித்தாவும். சுமார் 20 அடி உயரம் வரை இந்த மீன் பறக்கும் என்று கடல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.



    ராமேஸ்வரத்தில் உள்ள மன்னார் வளைகுடாவில் பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். #Forestofficials #GulfofMannar
    ராமேஸ்வரம்:

    இந்தியப் பெருங்கடலில் லட்சத்தீவுக் கடலின் பகுதியில் மன்னார் வளைகுடா அமைந்துள்ளது. இது இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இலங்கையின் மேற்குக் கரைக்கும் இடையில் 160 முதல் 200 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் உள்ள தாமிரபரணி ஆறும் இலங்கையில் உள்ள அருவி ஆறும் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன.

    இப்பகுதியினை சுற்றிலும் மீன்களின் இருப்பிடமாகத் திகழும் பவளப் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. 104 வகை கடின பவளப்பாறைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன.

    இந்நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில்  மக்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்கள் காற்றில் மிதந்து கடலின் அடியில் சென்று ஆழத்தில் குப்பையாக படிந்துள்ளது. இதனால் கடல் வெகுவாக மாசுப்படுகிறது.

    இதையடுத்து ராமேஸ்வரத்தைச் சேர்ந்த, ஸ்கூபா டைவிங் நன்கு தெரிந்த வனத்துறை அதிகாரிகள் கடலுக்கடியில் ஆழமாக சென்று,  படிந்திருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். #Forestofficials #GulfofMannar










    ×