search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவன் மர்ம மரணம்"

    பீகாரில் உள்ள தனியார் உறைவிடப் பள்ளி விடுதியில் எல்கேஜி மாணவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பாட்னா :

    பீகார் மாநில தலைநகர் பாட்னாவின் புறநகர் பகுதியான பதுகாவில் உள்ள தனியார் உறைவிடப் பள்ளியின் விடுதியில் இருந்து 7 வயது மதிக்கத்தக்க மாணவன் சடலத்தை போலீசார் இன்று கைப்பற்றியுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து அம்மாவட்ட போலீஸ் எஸ்.பி. அரவிந்த் குமார் கூறுகையில், எல்.கே.ஜி படித்து வந்த அபிமன்யூ எனும் மாணவனின் உடல் பள்ளி விடுதியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. கழுத்து பகுதியில் இறுக்கப்பட்ட அடையாளங்கள் உள்ளதால், மாணவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். எனவே, வழக்கு பதியப்பட்டு விசாரணை நடத்தி வருகிறோம், என தெரிவித்தார்.

    பள்ளி விடுதியில் இருந்து மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×