search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமநாதபுரம் டாஸ்மாக் கொள்ளை"

    ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து 767 மதுபாட்டில்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பழங்குளம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது.

    சம்பவத்தன்று இரவு சூப்பர்வைசர் ராஜ்குமார் மற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடை கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த கல்லாப்பெட்டியை திறந்து பார்த்தபோது பணம் எதுவும் இல்லை.

    இதையடுத்து கொள்ளையர்கள் கடையில் இருந்த 767 மதுபாட்டில்களை திருடிக்கொண்டு தப்பினர். மறுநாள் டாஸ்மாக் கடை உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் சூப்பர்வைசர் ராஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது மதுபாட்டில்கள் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார். திருட்டு போன மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.87 ஆயிரத்து 630 ஆகும்.

    ×