search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே கிராசிங்"

    சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் சர்வதேச லெவல் கிராசிங் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் சர்வதேச லெவல் கிராசிங் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சேலம் ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் கலந்துகொண்டு விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த விழிப்புணர்வு வாகனம் சேலம், நாமக்கல், கரூர் மற்றும் சேலம்- விருத்தாசலம், ஈரோடு- திருச்சி உள்ளிட்ட வழித்தடங்களில் உள்ள லெவல் கிராசிங் பகுதிகளில் மக்களிடம் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி பாதுகாப்பாக செல்வது குறித்து பிரசாரங்களை செய்யும்.

    மேலும் வாகனத்தில் லெவல் கிராசிங் பகுதிகளில் வாகனங்கள் பாதுகாப்பாக எவ்வாறு செல்ல வேண்டும் என்பதைக் குறித்த பாடல்களும் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படும், இந்த வாகனம் இன்றும், நாளையும் பிரசாரம் செய்கிறது. இந்த நிகழ்ச்சியின் போது சேலம் ரெயில்வே கோட்ட பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரி பிரவீன்குமார் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்,

    ×