search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்சம் கைது"

    லஞ்சம் வாங்கிய சர்வேயருக்கு 4 ஆண்கள் சிறை தண்டனை விடுத்து திண்டுக்கல் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    திண்டுக்கல்:

    பழனி அருகில் உள்ள சின்னகலையம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது வீட்டு மனையை அளவீடு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு நெய்க்கா ரபட்டி பிர்கா சர்வேயர் வெற்றிவேலை அணுகினார். அப்போது அளவீடு செய்து பட்டா மாறுதல் தருவதற்கு பரிந்துரை செய்ய ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளார். சுப்பிரமணி இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் தெரிவிக்கவே வெற்றிவேலை கையும் களவுமாக அவர்கள் கைது செய்தனர்.

    இது குறித்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கை விசாரித்த மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவரும், சிறப்பு நீதிபதியுமான நம்பி தீர்ப்பு அளித்தார்.

    ஊழல் தடுப்பு சட்டம் 1988 சட்டப்பிரிவு 7 மற்றும் 13-க்கு தலா 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    வாழப்பாடியில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.#Bribe

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள நில அளவை பிரிவில் வாழப்பாடி அக்ரகாரம் பகுதியை சேர்ந்த இந்திராணி என்பவர் தனக்கு சொந்தமான 2 வீட்டுமனைகளை அளந்து தனிபட்டா வழங்கக்கோரி விண்ணப்பித்தார்.

    அப்போது அங்கிருந்த ஊழியர் சவுந்திரராஜன் என்பவர் ரூ.20ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மாற்றித்தருவதாக கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் இந்திராணி புகார் கொடுத்தார்.

    இதையடுத்து சவுந்திரராஜனை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். இன்று காலை இந்திராணி சவுந்திரராஜனை வாழப்பாடி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பூக்கடைக்கு வருமாறும், அங்கு வைத்து பணம் தருவதாகவும் கூறினார். இதனால் சவுந்திரராஜன் பூக்கடைக்கு வந்தார்.

    அப்போது இந்திராணி ரசாயண பொடி கலந்த ரூ.10ஆயிரம் நோட்டுகளை சவுந்திரராஜனிடம் வழங்கினார். அந்த சமயம் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து செயல்பட்டு சவுந்திரராஜனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை வாழப்பாடி தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவண்ணாமலையில் லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் புரோக்கர் கைது செய்யப்பட்டனர். #bribe

    திருவண்ணாமலை:

    சென்னையை சேர்ந்தவர் சுனில்குமார். இவர், திருவண்ணாமலை பெரிய தெருவில் லாட்ஜ் வைத்துள்ளார். சுனில்குமார், கொசமடத் தெருவில் ஒரு நிலத்தை வாங்கி பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக திருவண்ணாமலை டவுன் சர்வேயர் (நில அளவையர்) கருணாகரனிடம் (வயது 50) விண்ணப்பித்தார்.

    பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு சர்வேயர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து, தனது லாட்ஜ் மேலாளர் ஜெயச்சந்திரன் மூலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சுனில்குமார் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சரவணக்குமார் தலைமையிலான போலீசார் ரூ.20 ஆயிரம் பணத்தில் ரசாயனம் தடவி ஜெயச்சந்தி ரனிடம் இன்று கொடுத்து அனுப்பினர்.

    டி.எஸ்.பி. சரவணக் குமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சாதாரண உடையில் சர்வேயர் அலுவலகத்திற்கு சென்று மறைந்து இருந்தனர். சர்வேயர் கருணாகரனிடம், ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை லஞ்சமாக ஜெயச்சந்திரன் கொடுத்தார்.

    பணத்தை சர்வேயர் கருணாகரன் பெற்றபோது, மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், லஞ்சம் வாங்க உடந்தையாக புரோக்கர் மூர்த்திையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #bribe

    ×