என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வாலிபர்கள் கிண்டல்
நீங்கள் தேடியது "வாலிபர்கள் கிண்டல்"
பஸ் நிறுத்தத்தில் இறங்கி பள்ளிக்கு செல்லும் மாணவிகளை அந்தப் பகுதியைச் சேர்ந்த சில வாலிபர்கள் கிண்டல் செய்ததால் வகுப்புகளை மாணவிகள் புறக்கணித்தனர்.
பேரையூர்:
பேரையூர் அருகேயுள்ளது ஏ.பாறைப்பட்டி, உசிலம்பட்டி. இந்த கிராமங்களைச சேர்ந்த மாணவ, மாணவிகள் 50 பேர் சுப்புலாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இவர்கள் சுப்புலாபுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி பள்ளிக்கூடம் இருக்கும் இடத்துக்கு 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும்.
பஸ் நிறுத்தத்தில் இறங்கி பள்ளிக்கு செல்லும் மாணவிகளை அந்தப் பகுதியைச் சேர்ந்த சில வாலிபர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தபோது அவர் வெளியே நடக்கும் பிரச்சினைக்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என கூறியதாக தெரிகிறது.
மாணவிகள் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு வந்தனர். பள்ளிக்குள் செல்லாமல் பள்ளியின் அருகே நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எங்களை கேலி செய்யும் வாலிபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை பள்ளியை புறக்கணிப்போம் என்று கூறிவிட்டு அங்கிருந்து வீட்டுக்குச் சென்று விட்டனர். #tamilnews
பேரையூர் அருகேயுள்ளது ஏ.பாறைப்பட்டி, உசிலம்பட்டி. இந்த கிராமங்களைச சேர்ந்த மாணவ, மாணவிகள் 50 பேர் சுப்புலாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இவர்கள் சுப்புலாபுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி பள்ளிக்கூடம் இருக்கும் இடத்துக்கு 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும்.
பஸ் நிறுத்தத்தில் இறங்கி பள்ளிக்கு செல்லும் மாணவிகளை அந்தப் பகுதியைச் சேர்ந்த சில வாலிபர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தபோது அவர் வெளியே நடக்கும் பிரச்சினைக்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என கூறியதாக தெரிகிறது.
மாணவிகள் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு வந்தனர். பள்ளிக்குள் செல்லாமல் பள்ளியின் அருகே நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எங்களை கேலி செய்யும் வாலிபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை பள்ளியை புறக்கணிப்போம் என்று கூறிவிட்டு அங்கிருந்து வீட்டுக்குச் சென்று விட்டனர். #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X