என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஐபிஎல் சீசன் 2018"
137 பந்தில் 162 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மா ஆட்டமிழக்கும்போது 37 பந்துகள் மீதம் இருந்தது. இதனால் ரோகித் சர்மா இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்முனையில் இருந்த அம்பதி ராயுடும் இந்த கருத்தை கூறியுள்ளார். ஆனால் நான் இரட்டை சதம் குறித்து யோசிக்கவில்லை என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘எதிர்முனையில் இருந்த அம்பதி ராயுடு என்னிடம், உங்களால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று தெரிவித்தார். ஆனால், நான் எனது ஆட்டத்தில்தான் கவனம் செலுத்தி வந்தேன். இரட்டை சதம் கறித்து யோசிக்கவில்லை. நான் மூன்று இரட்டை சதம் அடித்துள்ளார். அந்த மூன்றையும் அடிப்பேன் என்று நினைத்தது கூட கிடையாது’’ என்றார்.
மும்பை:
4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 224 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
மும்பையில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன் குவித்தது. ரோகித்சர்மா 137 பந்தில் 162 ரன்னும் (20 பவுண்டரி, 4 சிக்சர்), அம்பதிராயுடு 81 பந்தில் 100 ரன்னும் (8 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 36.2 ஓவரில் 152 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 224 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஹோல்டர் அதிகபட்சமாக 50 ரன் எடுத்தார். கலீல் அகமது, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் வீராட் கோலி கூறியதாவது:-
3-வது போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் எங்களுக்கு சிறிது நெருக்கடி ஏற்பட்டது. அதில் இருந்து நாங்கள் தற்போது மீண்டு வந்துள்ளோம். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகிய துறைகளிலும் எங்களது செயல்பாடு மிகவும் நன்றாக இருந்தது.
அம்பதிராயுடு தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார். அவருக்கு 2019 உலக கோப்பை வரை அணி துணை நிற்கும். அவரது விளையாட்டு நன்றாக இருக்கிறது.
ஒரு நாள் போட்டி அணிக்கு 4-வது வீரர் வரிசை சரியாக அமையவில்லை. தற்போது ஒரு புத்திசாலி அந்த இடத்தை நிரப்பி இருப்பது மகிழ்ச்சி.
இதே போல் பந்து வீச்சிலும் நாங்கள் பல்வேறு சோதனைகளை மேற் கொண்டு வருகிறோம். அதனால்தான் கலீல் அகமதுவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
2015-ல் உலக கோப்பைக்கு பிறகு 4-வது வீரர் வரிசை இந்திய அணிக்கு தலைவலியாக இருக்கிறது. 4-வது வரிசையில் களம் இறங்கி கடந்த சில தினங்களில் சதம் அடித்த 3-வது இந்திய வீரர் அம்பதிராயுடு ஆவார். மனிஷ்பாண்டே, யுவராஜ் ஆகியோர் மட்டுமே இந்த வரிசையில் சதம் அடித்து இருந்தனர்.
அம்பதிராயுடு குறித்து ரோகித் சர்மா கூறும்போது, “4-வது வீரர் வரிசைக்கு அம்பதிராயுடுவே பொருத்தமானவர். உலக கோப்பை வரை அவர் அந்த வரிசையில் ஆடுவார். யாரும் அதுபற்றி இனி கேள்வி எழுப்ப இயலாது. நெருக்கடியான நிலையில் அவர் சிறப்பாக செயல்படுகிறார்” என்றார்.
தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கூறும்போது, “எங்கள் அணி வீரர்கள் முழு பலத்துடன் ஆடவில்லை. இதுதான் எங்களின் மோசமான தோல்விக்கு காரணம். தேவையில்லாத ரன் அவுட்டுகளும் எங்களது பேட்டிங்கை சீர் குலைத்து விட்டது. அடுத்த போட்டிகளில் இது தவிர்க்கப்படும். இதே போல வீரர்கள் தேர்விலும் மாற்றம் செய்யப்படும்” என்றார்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. 5-வது மற்றும் கடைசி ஆட்டம் வருகிற 1-ந் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. #viratkohli #INDvWI
அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் அக்டோபர் மாதம் 6-ம் தேதி இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டி துவங்கியது. அக்டோபர் 18-ம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா சார்பில் 47 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
பிரதமர் மோடி மற்றும் இளைஞர் ஒலிம்பிக் வீரர்கள் இடையேயான இந்த சந்திப்பின்போது, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் உடன் இருந்தார். PMModi #YouthOlympicGames2018
கவுகாத்தி:
ஜேகன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இரு அணிகள் மோதும் 5 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் போட்டி நாளை கவுகாத்தியில் நடக்கிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சமநிலையில் உள்ளது.
ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, லோகேஷ் ராகுல், மனீஷ் பாண்டே, டோனி, ரிஷப் பண்ட் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர்.
பந்து வீச்சில் முகமது சமி, குல்தீப் யாதவ், சாகல், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், கலீல்அகமது ஆகியோர் உள்ளனர்.
மிடில் ஆர்டர் வரிசையில் அம்பதி ராயுடு, மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குல்தீப் யாதவ், சாகுல் இருப்பதால் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைப்பது சற்று கடினம்தான். இந்தியா வலிமையாக உள்ளதால் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட்இண்டீஸ் அணி ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த அணியில் சாமுவேல்ஸ், ஷாய் ஹோப், சுனில் அம்ரீஸ், ஹெட்டிமயர், சந்தர்பால் ஹேம்ராஜ், எவின் லீவிஸ், பாலெஸ் ஆகியோர் பேட்டிங்கில் உள்ளனர்.
பந்து வீச்சில் ஜேசன் ஹோல்டர், கேமர்ரோச், ஜோசப், பிஷூ, ஆஸ்லேநர்ஸ், தாமஸ் ஆகியோர் உள்ளனர்.
வெஸ்ட்இண்டீஸ் அணியை குறைத்து மதித்து விட முடியாது. அந்த அணி திடீரென்று எழுச்சி பெற்று சிறப்பாக விளையாட கூடியது.
இதனால் இந்தியா எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியம். இப்போட்டி நாளை பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, லோகேஷ் ராகுல், டோனி, ரிஷப் பண்ட், மனீஷ்பாண்டே, குல்தீப் யாதவ், சாதல், முகமது சமி, உமேஷ் யாதவ், ஜடேஜா, கலீல் அகமது.
வெஸ்ட்இண்டீஸ்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஷாய் ஹோப், சுனில் அம்ரீஸ், சாமுவேல்ஸ், லீவீஸ், ஹெட்டிமயர், சந்தர்பால், ஹேம்ராஜ், ஆலன், பிஷூ, ஜோசப், நர்ஸ், கீமோபவுல், ரோவன் பாடுவல், கேமர் ரோச், தாமஸ். #indvswi #odi #viratkohli
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்