search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் சீசன் 2018"

    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடைசி ஓவரை அபாரமாக வீசய முஷ்டாபிஜூர் ரஹ்மானுக்கு கேப்டன் மோர்தசா பாராட்டு தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் அபு தாபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காள தேச அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 249 ரன்கள் குவித்தது. பின்னர் 250 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது. முதலில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் ஓவர் செல்ல செல்ல இலக்கை நோக்கி பயணம் செய்தது.

    ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரை முஷ்டாபிஜூர் ரஹ்மான வீசினார். போட்டியில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கடைசி ஓவரை நேர்த்தியாக வீசிய முஷ்டாபிஜூர் ரஹ்மான் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    முஷ்டாபிஜூர் ரஹ்மானின் அபார பந்து வீச்சால் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்காள தேசம், பாகிஸ்தானை எதிர்த்து விளையாட இருக்கிறது. அந்த போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும்.



    கடைசி ஓவரை அபாரமாக வீசிய முஷ்டாபிஜூர் ரஹ்மானை கேப்டன் மோர்தசா வெகுவாக பாராட்டியுள்ளார். முஷ்டாபிஜூர் ரஹ்மான் பந்து வீச்சு குறித்து மோர்தசா கூறுகையில் ‘‘போட்டியின் முடிவில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் மாயாஜாலம் காட்டியவர் போன்று காட்சியளித்தார். கடைசி ஓவரில் 8 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது மிகவும் கடினமானது. அனைத்து புகழும் முஷ்டாபிஜூர் ரஹ்மானையே சாரும்.

    போட்டியின் மத்தியில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் தசைப்பிடிப்பால் சற்று அவதிப்பட்டார். அவர் 10 ஓவர் முழுவதும் வீச வேண்டும் என்று விரும்பினோம். ஆனால், அவரால் 10 ஓவரை நிறைவு செய்ய முடியவில்லை. அவர் பந்து வீசியது மிகவும் கடினமானது’’ என்றார்.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார். #INDvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 237 ரன்கள் சேர்த்தது. பின்னர் 238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோரின் சதத்தால் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஓய்வில் இருக்கும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    அதேபோல் சதம் அடித்த ரோகித் சர்மா, ஷிகர் தவானுக்கு சச்சின் தெண்டுல்கரும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    இந்திய வீரர்கள் எங்களைவிட திறமையானவர்கள் என ஆசிய கோப்பை போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியுள்ளார். #AsiaCup2018 #INDvPAK
    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    எங்களது பந்து வீச்சாளர்கள் மீண்டும் சிறப்பாக பந்து வீசினார்கள். தவானின் பேட்டிங் அபாரமாக இருந்தது. நாங்கள் இருவரும் இணைந்து எங்களது பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியதாவது:-



    நாங்கள் சிறப்பாகவே ஆடினோம். ஆனால் 20 முதல் 30 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். சில முக்கியமான கேட்ச்களை தவறவிட்டோம். இது மாதிரி கேட்சுகளை தவறவிட்டால் வெற்றி பெறுவது கடினம்.

    நாங்கள் தொடக்கத்லேயே சில விக்கெட்டுகளை வீழ்த்த நினைத்தோம். இது தொடர்பாக பந்து வீச்சாளர்களிடம் பேசினேன். ஆனால் தவான் ரோகித் போன்ற வீரர்களை ‘அவுட்’ செய்ய முடியவில்லை. அவர்கள் திறமைசாலிகள்.

    எங்களைவிட இந்திய வீரர்கள் திறமையானவர்கள் அடுத்த ஆட்டம் எங்களுக்கு வாழ்வா? சாவா? போட்டியாகும். இதனால் அதில் சிறப்பாக செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதுவது பாகிஸ்தானா? வங்காளதேசமா? என்பது இரு அணிகள் நாளை மோதும் ஆட்டத்தின் முடிவு மூலம் தெரிய வரும்.

    இந்திய அணி நாளைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. #AsiaCup2018 #INDvPAK
    ஷிகர் தவான்- ரோகித் சர்மா ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 210 ரன் குவித்ததன் மூலம் சேசிங்கில் அதிக ரன் எடுத்த இந்திய ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளது. #Asiyacup2018 #RohitSharma #ShikharDhawan
    ஷிகர் தவான்- ரோகித் சர்மா ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 210 ரன் குவித்தது. இதன் மூலம் சேசிங்கில் தொடக்க விக்கெட்டுகள் அதிக ரன் எடுத்த இந்திய ஜோடி என்ற சாதனையை படைத்தது.

    இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரக ஹேமில்டன் மைதானத்தில் காம்பீர்- ஷேவாக் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 201 ரன் (அவுட் இல்லை) குவித்ததே சாதனையாக இருந்தது.

    பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த தொடக்க ஜோடி என்ற சாதனையை தவான்- ரோகித் சர்மா படைத்தனர். இதற்கு முன்பு கங்குலியும், தெண்டுல்கரும் தொடக்க ஜோடியாக 1998-ம் ஆண்டு டாக்காவில் 159 ரன் எடுத்ததை அவர்கள் கடந்தனர். ஒட்டு மொத்தத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன் எடுத்த 2-வது ஜோடியாகும்.



    1996-ம் ஆண்டு சார்ஜாவில் 2-வது விக்கெட்டுக்கு சித்துவும், தெண்டுல்கரும் 231 ரன் குவித்ததே சாதனையாக இருந்தது. #Asiyacup2018 #RohitSharma #ShikharDhawan
    தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் எனும் சாதனை படைத்துள்ளார். #RohitSharma #AsiaCup2018 #INDvPAK
    துபாய் :

    14வது ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது.

    அடுத்து 238 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் மற்றும் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தினார்கள். இதனால் 63 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் பாகிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

    இந்த போட்டியில் ரோகித் சர்மா 94 ரன்கள் அடித்த போது ஒரு நாள் போட்டியில் 7 ரன்களை கடந்தார். 181 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது இந்திய வீரர் எனும் சாதனையை படைத்தார்.
     
    கேப்டன் விராட் கோலி 161 போட்டிகளிலும், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 174 போட்டிகளிலும் 7 ரன்களை குவித்து முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

    பாகிஸ்தான் அணியுடனான நேற்றைய போட்டியில் சதம் அடித்த ரோகித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் 19-வது சதத்தை பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது. #RohitSharma #AsiaCup2018 #INDvPAK 
    ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் நடந்த மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அணி த்ரில் வெற்றி பெற்றது. #AsiaCup2018 #BANvAFG #AFGvBAN
    அபுதாபி:

    அபுதாபியில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் நடந்த மற்றொரு போட்டியில் வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லித்தன் தாசும், நஜ்மல் உசைன் ஷண்டோவும் களமிறங்கினர்.

    லித்தன் தாஸ் 41 ரன்களுடனும், முஷ்பிகுர் ரகுமான் 33 ரன்களுடனும் அவுட்டாகினர். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    அடுத்து ஜோடி சேர்ந்த இம்ருல் கெய்சும், மகமதுல்லாவும் இணைந்து பொறுப்புடன் விளையாடினர். இதனால் வங்காளதேசம் அணி 200 ரன்களை கடந்தது.

    இறுதியில், வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களை எடுத்தது. மகமதுல்லா 74 ரன்களில் ஆட்டமிழந்தார். இம்ருல் கெய்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 72 ரன்களை எடுத்துள்ளார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் அல்தாப் ஆலம் 3 விக்கெட்டும், முஜிபுர் நயீப், குல்புதின் நயீப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 250 ரன்களை இலக்காக கொண்டு ஆப்கானிஸ்தான் அணி சேசிங் செய்ய தொடங்கியது. அந்த அணியில் முகமது மற்றும் இன்சானுல்லா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரகளாக களமிறங்கினர். இன்சானுல்லா 8 ரன்கள் மற்றும் ரக்மத் ஷா ஒரு ரன் என அடுத்தடுத்து தொடக்கத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினர்.

    பின்னர் 3-வது விக்கெட்டுக்கு முகமதுவுடன் ஜோடி சேர்ந்த ஹஸ்மதுல்லா ஷகிதி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், ஆப்கானிஸ்தான் அணியின் எண்ணிக்கை சீரான அளவில் உயர்ந்தது. சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த முகமது 53 ரன்களில் மகமதுல்லா பந்தில் போல்டு ஆகி வெளியேறினார்.

    அடுத்து களமிறங்கிய அஸ்கர் ஆப்கன் 39 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த நிலையில், ஷகிதி 71 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும் முகமது நபி மற்றும் சென்வாரி ஆகியோரின் பொருப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை நோக்கி பயணித்தது. ஆனால் அணியின் எண்ணிக்கை 238 ஆக இருந்த நிலையில் 38 ரன்கள் எடுத்திருந்த முகமது நபி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியதால் போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.



    கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முஸ்தாபிசுர் ரகுமான் பந்து வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் அடித்த ரஷித் கான் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். மூன்றாவது பந்தில் பைஸ் முறையில் சென்வாரி ஒரு ரன் எடுத்தார், நான்காவது பந்தில் ரன் அடிக்காமல் குல்புதின் நயீப் வீணடித்தார்.

    பின்னர் 5-வது  பந்தை மீண்டும் அடிக்காமல் விட்ட நயீப், பைஸ் முறையில் ஓரு ரன் ஓடினார். கடைசி பந்தில் வெற்றி பெற பவுண்டரி அடிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் விளையாடிய சென்வாரி, முஸ்தாபிசுர் ரகுமான் வீசிய நேர்த்தியாக அந்த பந்தை வீணடித்தார். இதனால் வங்காளதேசம் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

    வங்காளதேசம் அணி தரப்பில் மோர்டாசா மற்றும் முஸ்தாபிசுர் ரகுமான் தலா 2 விக்கெட்டுகள் கைப்பறினர். மகமதுல்லா மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    இரண்டு விக்கெட் மற்றும் கடைசி ஓவரை சிறப்பாக வீசி வங்காளதேச அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய முஸ்தாபிசுர் ரகுமான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #AsiaCup2018 #BANvAFG #AFGvBAN
    ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் அபார சதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டனர். #AsiaCup2018 #INDvPAK
    துபாய் :

    இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பகர் சமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். புவனேஸ்வர் குமார், பும்ரா பந்து வீச்சை தொடங்கினார்கள்.

    புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா பந்து வீச்சை பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் எதிர்கொள்ள திணறினார்கள். அதேவேளையில் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். முதல் 7-வது ஓவரில் பாகிஸ்தான் விக்கெட் ஏதும் இழக்கவில்லை. 8-வது ஓவரில் சாகல் வீசிய பந்தில் இமாம் உல் ஹக் எல்பிடபிள்யூ ஆனார்.

    அடுத்து பாபர் ஆசம் களம் இறங்கினார். பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களே எடுத்திருந்தது. அதன்பின் பகர் சமான் 31 ரன்கள், பாபர் ஆசம் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    4-வது விக்கெட்டுக்கு கேப்டன் சர்பிராஸ் கான் உடன் சோயிப் மாலிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பாகிஸ்தானை சரிவில் இருந்து மீட்டது. நேரம் ஆகஆக இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சோயிப் மாலிக் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய சர்பிராஸ் அகமது 44 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.



    இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் குவித்தது. சர்பிராஸ் அகமது ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் சோயிப் மாலிக் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் பும்ரா சிறப்பாக பந்து வீச பாகிஸ்தான் ரன்வேகத்தில் தடை ஏற்பட்டது.

    இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களே எடுத்தது. இந்திய அணி சார்பில் பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    இதனால், 238 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்தியா சேசிங் செய்ய தொடங்கியது. ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷிகர் தவான் அதிரடி ஆட்டத்தையும், ரோகித் சர்மா நிதான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

    இவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் பாகிஸ்தான் பந்துவீச்சாளார்கள் திணறினர். அணியின் எண்ணிக்கை 91 ஆக இருந்த போது தவான் அரை சதம் அடித்தார். அவரை தொடர்ந்து 65 பந்துகளில் ரோகித் சர்மாவும் அரை சதம் அடித்தார். இதன் பின்னர் விஸ்வரூபம் எடுத்த இந்த ஜோடி பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை நாலா புறமும் சிதறடித்தனர்.

    இதனால், இந்திய அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது, 95 பந்துகளை சந்தித்த நிலையில் ஷிகர் தவான் தனது 15 சதத்தை அடித்து அசத்தினார். ஆசிய கோப்பை தொடரில் இது அவரது இரண்டாவது சதமாகும். பின்னர் 94 ரன்கள் எடுத்திருந்த போது ஒரு நாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் சர்மா.

    தவான் மற்றும் ரோகித் ஜோடி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பாகிஸ்தான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால், அணியின் எண்ணிக்கை 210 ஆக இருக்கும் போது தவான் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி 114 ரன்களில் வெளியேறினார். பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் எண்ணிக்கை இதுவாகும். அடுத்து ராயுடு களமிறங்கிய சிறிது நேரத்தில் 106 பந்துகளில் தனது 19 ஒரு நாள் சதத்தை பதிவு செய்தார் ரோகித் சர்மா.

    இறுதியில் 39.3 ஓவர்கள் முடிவில் 238 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியை அடித்து நொறுக்கி இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 111 ரன்களுடனும் ராயுடு 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். #AsiaCup2018 #INDvPAK 
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் அடித்தபோது ஒருநாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்து முஷ்பிகுர் ரஹிம் சாதனைப் படைத்துள்ளார். #MushfiqurRahim
    வங்காள தேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹிம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 33 ரன்கள் சேர்த்தார். 7 ரன்னைத் தொட்டபோது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 190 போடடிகளில் 5 ஆயிரம் ரன்னைத் தொட்டார்.

    இதன்மூலம் 5 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது வங்காள தேச வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் தமிம் இக்பால், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.



    31 வயதாகும் முஷ்பிகுர் ரஹிம் 2005-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலும், 2006-ல் ஒருநாள் போட்டியிலும் அறிமுகமானார். ஒருநாள் போட்டியில் 6 சதம், 29 அரைசதங்களும், டெஸ்ட் போட்டியில் ஐந்து சதம், 29 அரைசதங்களும் அடித்துள்ளார்.
    இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் அடித்துள்ளது. #AsiaCup2018 #INDvPAK
    இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 சுற்று ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பகர் சமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். புவனேஸ்வர் குமார், பும்ரா பந்து வீச்சை தொடங்கினார்கள்.

    புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா பந்து வீச்சை பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் எதிர்கொள்ள திணறினார்கள். அதேவேளையில் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். முதல் 7-வது ஓவரில் பாகிஸ்தான் விக்கெட் ஏதும் இழக்கவில்லை. 8-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் இமாம் உல் ஹக் எல்பிடபிள்யூ ஆனார். இவர் 20 பந்தில் 10 ரன்கள் அடித்தார்.



    அடுத்து பாபர் ஆசம் களம் இறங்கினார். பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் சேர்த்துள்ளது. பகர் சமான் 12 ரன்னுடனும், பாபர் ஆசம் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வங்காள தேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #AsiaCup2018 #BANvAFG
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது ‘சூப்பர் 4’ சுற்று நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அபு தாபியில் நடைபெறும் ஆட்டத்தில் வங்காள தேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வங்காள தேச அணி கேப்டன் மோர்தசா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். வங்காள தேச அணியில் நஸ்முல் இஸ்லாம், இம்ருல் கெய்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் சமியுல்லா சேர்க்கப்பட்டுள்ளார்.
    ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தான் அணியில் முகமது அமிர் சேர்க்கப்பட்டுள்ளார். #AsiaCup2018 #INDvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது ‘சூப்பர் 4’ சுற்று நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் முகமது அமிர், சதாப் கான் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யரின் சதங்களால் மும்பை 400 ரன்கள் குவித்தது. #VijayHazareTrophy
    பிசிசிஐ-யால் நடத்தப்பட்டு வரும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தற்போது நடைபெற்று வருகிறது. இன்று பெங்களூருவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை - ரெயில்வேஸ் அணிகள் மோதி வருகின்றன.

    டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ப்ரித்வி ஷா, ரகானே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரகானே 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து ப்ரித்வி ஷா உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். அந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 61 பந்தில் சதம் அடித்த ப்ரித்வி ஷா 81 பந்தில் 14 பவுண்டரி, 6 சிக்சருடன் 129 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் 118 பந்தில் 8 பவுண்டரி, 10 சிக்சருடன் 144 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 55 பந்தில் 67 ரன்களும், லாட் 19 பந்தில் 30 ரன்களும் அடிக்க மும்பை அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 400 ரன்கள் குவித்தது.
    ×