என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 3
நீங்கள் தேடியது "சர்பேஸ் கோ 3"
புதிய ஸ்மார்ட்வாட்ச்-ஐ தொடர்ந்து ஹுவாய் நிறுவனம் இரண்டு புதிய ஃபிட்னஸ் சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Huawei
ஹுவாய் நிறுவனம் வாட்ச் ஜி.டி. ஸ்மார்ட்வாட்ச் மாடலுடன் இரண்டு புதிய ஃபிட்னஸ் டிராக்கிங் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. ஹூவாய் பேண்ட் 3 மற்றும் ஹூவாய் பேண்ட் 3இ என இவை அழைக்கப்படுகின்றன.
ஹூவாய் பேண்ட் 3 மாடலில் 0.95 இன்ச் AMOLED தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெட்டல் ஃபிரேம் ஒன்று டிஸ்ப்ளேவை சுற்றி பொருத்தப்பட்டுள்ளது. இதனை சிலிகான் ஸ்டிராப் கொண்டு அணிந்து கொள்ளளலாம்.
இந்த பேண்ட் அப்லோ 3 சிப் மூலம் இயங்குகிறது. இதில் ட்ரூஸ்லீப் 2.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது உறக்கத்தை கண்கானிப்பதோடு, இதனுடன் வழங்கப்பட்டிருக்கும் ஐ.ஆர். எனும் சென்சார் இதயதுடிப்பை டிராக் செய்யும். இந்த பேண்ட் அழைப்புகளுக்கான நோட்டிஃபிகேஷன்களை வழங்குகிறது.
25 கிராம் எடை கொண்டிருக்கும் ஹூவாய் பேண்ட் 3 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இது 50 மீட்டர் வரையிலான தண்ணீரிலும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
ஹூவாய் பேண்ட் 3இ அனைவரும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கிறது. இதில் புதிதாக ஃபுட்வியர் மோட் வழங்கப்பட்டுள்ளது. இது ஒட்டப்பயிற்சியின் போது 97 சதவிகிதம் வரை சரியான விவரங்களை வழங்குகிறது. இதற்கென 6-ஆக்சிஸ் கைரோஸ்கோப் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் 50 மீட்டர் வரையிலான வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஹூவாய் பேண்ட் 3இ ஒருமுறை சார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கும், ஸ்டான்ட்பை மோடில் 21 நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என ஹூவாய் தெரிவித்துள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் அதன் பின் வெளியான இயங்குதளங்களிலும், ஐ.ஓ.எஸ். 9.0 மற்றும் அதன்பின் வெளியான பதிப்புகளை கொண்ட சாதனங்களில் சப்போர்ட் செய்யும்.
இந்தியாவில் ஹூவாய் பேண்ட் 3 விலை ரூ.4,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 26 ஆம் தேதி முதல் அமேசான் தளத்தில் ஹூவாய் பேண்ட் 3 கிடைக்கிறது. இது அப்சிடியன் பிளாக் மற்றும் ஸ்பேஸ் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. ஹூவாய் பேண்ட் 3இ மாடலின் விலை ரூ.1,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பின்க் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையில் சுமார் 1.5 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. #Realme3
ஒப்போவின் துணை பிராண்டு ரியல்மி இந்தியாவில் ரியல்மி 3 ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை நேற்று (மார்ச் 12) நடைபெற்றது. மதியம் சரியாக மதியம் 12 மணிக்கு துவங்கிய விற்பனை சில நிமிடங்களில் நிறைவுற்றது.
ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெற்ற விற்பனையில் சுமார் 1.5 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக ரியல்மி அறிவித்துள்ளது. முதல் விற்பனையில் அமோக வரவேற்பு கிடைத்திருப்பதை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் மீண்டும் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது.
A splash of colours along with offers is coming to you this Holi, as the #realmeHoliDays sale is starting tomorrow with amazing discounts on your favourite #realme products. 🎉
— realme (@realmemobiles) March 12, 2019
Rush to https://t.co/reDVoAlOE1, @Flipkart or @amazonIN to make your Holi even more colourful.🎈 pic.twitter.com/DdYGwI50AM
பின் நேற்று இரவு 8 மணிக்கு மீண்டும் விற்பனைக்கு வந்தது. இதில் ஸ்மார்ட்போனினை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.500 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்பட்டது. இத்துடன் ஜியோ சார்பில் ரூ.5,300 மதிப்பிலான சலுகைகள் வழங்கப்பட்டது.
இத்துடன் மார்ச் 13 முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை ரியல்மி ஹோலி விற்பனை நடைபெறுகிறது. இதில் ரியல்மி சி1 (2019) ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.99 மதிப்புள்ள மொபைல் பாதுகாப்பு சலுகை வழங்கப்படுகிறது. இந்த ஸ்மாரட்போனின் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் ரூ.7,499, 3 ஜி.பி. ரேம் வெர்ஷன் ரூ.8,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
With 2,10,000+ units of #realme3 sold on @Flipkart and https://t.co/reDVoAlOE1 , let’s welcome the new segment leader. Thank you to all the fans for the overwhelming response. 🤩
— realme (@realmemobiles) March 12, 2019
Gear up for the next sale at 12 noon, 19th Mar. #PowerYourStylepic.twitter.com/cO84cEk3a2
தள்ளுபடி விற்பனையில் ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் ரூ.1000 உடனடி தள்ளுபடி, ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.1000 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் மொபிக்விக் மூலம் பணம் செலுத்துவோர் 20 சதவிகிதம் சூப்பர்கேஷ் வழங்கப்படுகிறது.
முதல் நாளில் மட்டும் இரண்டு முறை நடைபெற்ற விற்பனையில் மொத்தம் சுமார் 2,10,000 ரியல்மி 3 ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி இருக்கின்றன. ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை மார்ச் 19 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு நடைபெற இருக்கிறது.
ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. #Kanchana3 #RaghavaLawrence
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி'.
அதனைத்தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி' படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா' வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2' படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், சத்யராஜ், கிஷோர், மனோபாலா, சூரி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை தமிழ் புத்தாண்டுக்கு பிறகு, தேர்தலுக்கு அடுத்த நாளான ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். #Kanchana3 #RaghavaLawrence #Vedhika #Oviyaa
ஒப்போவின் துணை பிராண்டான ரியல்மி மார்ச் 4 ஆம் தேதி தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. #Realme3 #Smartphone
ஒப்போ நிறுவனத்தின் துணை பிராண்டு ரியல்மி தனது புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 4 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ரியல்மி தனது புதிய ஸ்மார்ட்போனிற்கென டீசர்களை வெளியிட்டு வந்தது. இதில் ஸ்மார்ட்போன்களில் செங்குத்தாக பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ரியல்மியின் முந்தைய ஸ்மார்ட்போன்களான ரியல்மி 2 மற்றும் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் கிடைமட்டமாக டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டிருந்தது.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் டைமண்ட் கட் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ரியல்மி 1 மற்றும் ரியல்மி 2 மாடல்களிலும் டைமண்ட் கட் வடிவமைப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ஸ்மார்ட்போனுடன் கவர்ச்சிகரமான கேஸ் வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் அழைப்பிதழில் “Power Your Style” எனும் டேக்லைன் இடம்பெற்றிருக்கிறது. முன்னதாக ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், ஏ.ஐ. என்ஜின், ஜி.பி.யு. அக்செல்லரேஷன் மற்றும் கேமிங் மோட் உள்ளிட்டவை வழங்கப்படும் என ரியல்மி பிராண்டு தலைமை செயல் அதிகாரி உறுதிப்படுத்தி இருந்தார்.
ரியல்மி 2 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் ரூ.8,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் புதிய ரியல்மி 3 ஸ்மார்ட்போன் போட்டியை ஏற்படுத்தும் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய ரியல்மி 3 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.
சோனி நிறுவனத்தின் புதிய எக்ஸ்பீரியா எல்3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #XperiaL3 #Smartphone
சோனி நிறுவனம் எக்ஸ்.ஏ.3 மற்றும் எக்ஸ்.ஏ.3 பிளஸ் ஸ்மார்ட்போன்களை தவிர புதிய என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோனியின் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் எல்3 என்று அழைக்கப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் 18:9 ஹெச்.டி. 720 பிக்சல் எல்.சி.டி. டிஸ்ப்ளே, மீடியாடெக் சிப்செட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, போர்டிரெயிட் வசதியுடன் வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. + 2 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் எக்ஸ்பீரியா எல்3 ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன்களிடையே பொருத்தப்பட்டிருக்கிறது.
புகைப்படம் நன்றி: winfuture
ஸ்மார்ட்போன் முழுவதும் பிளாஸ்டிக் கேஸ் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் சில்வர், கிரே மற்றும் கோல்டு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் எக்ஸ்பீரியா எல்3 ஸ்மார்ட்போன் யு.எஸ்.பி. டைப்-சி கனெக்டிவிட்டி மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
சோனி எக்ஸ்பீரியா எல்3 ஸ்மார்ட்போனின் விலை பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லாத நிலையில், இதன் விலை 199 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.16,020) என நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போனினை சோனி சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம்.
கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் தனது கூல் 3 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #Cool3 #Smartphone
கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் கூல் 3 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய கூல் 3 ஸ்மார்ட்போனில் 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் சிப்செட், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, 0.3 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமராவும் செல்ஃபிக்களை எடுக்க 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் செல்ஃபி கேமராவுடன் பியூட்டிஃபை அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் ஃபேஸ் அன்லாக் வசதியும், ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் இரட்டை நிறம் கிளாஸி பேக் கவர் கொண்டிருக்கிறது. 4ஜி வோல்ட்இ கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் கூல்பேட் கூல் 3 ஸ்மார்ட்போன் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
கூல்பேட் கூல் 3 சிறப்பம்சங்கள்:
- 5.71 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர்
- 2 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 0.3 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
இந்தியாவில் கூல்பேட் கூல் 3 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ரூபி பிளாக், ஓசன் இன்டிகோ மற்றும் டியல் கிரீன் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. கூல்பேட் கூல் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் கிடைக்கிறது.
ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படம் தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் ரிலீசாகவிருப்பதாக கூறப்படுகிறது. #Kanchana3 #RaghavaLawrence
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி'.
அதனைத்தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி' படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா' வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2' படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், மனோபாலா, சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தை ஏப்ரல் 19-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. முன்னதாக படம் தமிழ் புத்தாண்டன்று ரிலீசாகும் என்று கூறப்பட்டது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். #Kanchana3 #RaghavaLawrence #Vedhika #Oviyaa
புரோ கபடி லீக்கில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் மூன்றாவது சுற்றில் டெல்லி அணியை 45 - 33 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி உபி யோதா அணி இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது. #ProKabaddiLeague #UpYodha #DabangDelhi
கொச்சி:
6-வது புரோ கபடி லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், யு மும்பா, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே ஆப்ஸ் சுற்று) முன்னேறின.
நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் உ.பி. யோதா 34 - 29 என்ற புள்ளிக்கணக்கில யு மும்பாவை தோற்கடித்தது. மற்றொரு சுற்றில் தபாங் டெல்லி 39 - 28 என்ற புள்ளிக்கணக்கில் பெங்காலை விரட்டியது. அதன்மூலம் யு மும்பா, பெங்கால் அணிகள் வெளியேற்றப்பட்டன.
இந்நிலையில், எலிமினேட்டர் மூன்றாவது சுற்றுக்கான போட்டியில் தபாங் டெல்லி மற்றும் உபி யோதா அணிகள் மோதின.
இதில், ஆட்டத்தின் முதலில் இருந்தே உபி யோதா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதியில் 27 - 13 என்ற புள்ளிக்கணக்கில் உபி யோதா அணி முன்னிலை பெற்றது.
தொடர்ந்து, இரண்டாவது பாதியிலும் உபி யோதா அணி அபாரமாக ஆடியது. இதனால் ஆட்டத்தின் முடிவில் 45 - 33 என்ற புள்ளிக்கணக்கில் டெல்லியை வீழ்த்தியது.
இந்த வெற்றி மூலம் உபி யோதா அணி இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதில் உபி யோதா அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது. #ProKabaddiLeague #UpYodha #DabangDelhi
6-வது புரோ கபடி லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், யு மும்பா, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே ஆப்ஸ் சுற்று) முன்னேறின.
நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் உ.பி. யோதா 34 - 29 என்ற புள்ளிக்கணக்கில யு மும்பாவை தோற்கடித்தது. மற்றொரு சுற்றில் தபாங் டெல்லி 39 - 28 என்ற புள்ளிக்கணக்கில் பெங்காலை விரட்டியது. அதன்மூலம் யு மும்பா, பெங்கால் அணிகள் வெளியேற்றப்பட்டன.
இந்நிலையில், எலிமினேட்டர் மூன்றாவது சுற்றுக்கான போட்டியில் தபாங் டெல்லி மற்றும் உபி யோதா அணிகள் மோதின.
இதில், ஆட்டத்தின் முதலில் இருந்தே உபி யோதா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதியில் 27 - 13 என்ற புள்ளிக்கணக்கில் உபி யோதா அணி முன்னிலை பெற்றது.
தொடர்ந்து, இரண்டாவது பாதியிலும் உபி யோதா அணி அபாரமாக ஆடியது. இதனால் ஆட்டத்தின் முடிவில் 45 - 33 என்ற புள்ளிக்கணக்கில் டெல்லியை வீழ்த்தியது.
இந்த வெற்றி மூலம் உபி யோதா அணி இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதில் உபி யோதா அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது. #ProKabaddiLeague #UpYodha #DabangDelhi
நான் சின்ன சின்ன வேடங்களில் நடித்த படங்களுக்கு கூட என் பெயரை சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். வியாபார பொருட்களிலும் என் பெயரை பயன்படுத்துகிறார்கள். இது வருத்தம் அளிப்பதாக ஓவியா கூறினார். #Oviyaa
களவாணி-2, 90 எம்.எல், காஞ்சனா என்று சினிமாவில் பிசியாக இருக்கும் ஓவியா அளித்த பேட்டி:
சின்ன வயசிலிருந்தே ரொம்ப சுதந்திரமா இருக்கணும்னு நினைக்கிற பொண்ணு நான். யாருகிட்டயும் எந்த உதவியும் கேட்கமாட்டேன். என் செலவைக்கூட நானே பார்த்துக்குவேன். அந்த வயசுல பணம் சம்பாதிக்க என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான் மாடலிங் வாய்ப்பு வந்துச்சு. மாடலிங், சின்னச் சின்ன விளம்பரங்கள் பண்ண ஆரம்பிச்சேன். என் பாக்கெட் மணிக்கு அது சரியா இருந்துச்சு. அப்போதான் என் மாடலிங் போட்டோஸ் பார்த்துட்டு ‘களவாணி’ படத்தின் டைரக்டர் சற்குணம் கூப்பிட்டார். ‘களவாணி’ படத்திலிருந்து ஹெலன் ஓவியாவா மாறியாச்சு.
புத்தாண்டு திட்டம் என்ன?
எப்போதும் போல நண்பர்களுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளேன். அதன் பின்னர் எனக்கு மிகவும் பிடித்த பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அனேகமாக இமயமலைக்கு செல்லலாம்.
உங்கள் வாழ்க்கையை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், முன் என இரண்டாக பிரிக்கலாமா?
நிறைய பேர் நான் ஒரே இரவில் பெரிய ஆளாக, பிரபலமாக மாறிவிட்டதாக நினைக்கிறார்கள். அது ஓரளவு உண்மை தான். அந்த நிகழ்ச்சி மூலம் தான் எனக்கு இவ்வளவு புகழ் கிடைத்தது. ஆனால் பெரிய கஷ்டங்கள், சிரமங்களுக்கு பிறகே இந்த இடத்திற்கு வந்துள்ளேன். பல ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவுக்கு வந்துவிட்டேன். ஆனால் இந்த புகழ் கிடைக்கவில்லை. பதிலாக போராடிக்கொண்டே இருந்தேன். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் கூட மக்கள் என்னை மறக்காமல்நேசிக்கிறார்கள். அது ஆச்சர்யப்படுத்துகிறது.
இணையதளமோ, நேரிலோ என்னை ரசிகர்கள் அவர்கள் குடும்பங்களில் ஒருவராக தான் பார்க்கிறார்கள். இது என் வாழ்க்கையின் மிக முக்கிய தருணம். சிலர் என்னுடைய ரசிகர்களை தவறாக பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுத்தி சம்பாதிக்கிறார்கள். நான் சின்ன சின்ன வேடங்களில் நடித்த படங்களுக்கு கூட என் பெயரை சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். வியாபார பொருட்களிலும் என் பெயரை பயன்படுத்துகிறார்கள். இது வருத்தம் அளிக்கிறது.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வமா?
ஆமாம். ஆனால் அறம் போன்ற சீரியசான படங்கள் அல்ல. என்னுடைய படங்கள் வித்தியாசமானதாக இருக்கும். மாஸ் மற்றும் பொழுதுபோக்கு படங்களாக இருக்கும். என் ரசிகர்களும் என்னை போலவே இருக்க வேண்டும். கருத்து சொல்லி போரடிக்க விரும்பவில்லை. #Oviyaa #Kanchana3 #Kalavani2 #90ML
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘பேட்ட’ படத்துடன் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் காஞ்சனா 3 படத்தின் டீசர் இணைந்துள்ளது. #Petta
ராகவா லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடித்துவரும் படம் ‘காஞ்சனா 3’ (முனி 4). இந்த படத்தில் வேதிகா மற்றும் ஓவியா கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும், இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
படத்தின் கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மோஷன் போஸ்டருடன் கூடிய பர்ஸ்ட் லுக் டீசரை ‘பேட்ட’ படத்துடன் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
ஏப்ரல் 18-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று லாரன்ஸ் அறிவித்துள்ளார். கோடை விடுமுறையை கணக்கில் கொண்டே, இந்த தேதியை முடிவு செய்துள்ளது படக்குழு. ‘காஞ்சனா’ படத்தின் 2 பாகங்களுமே மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால், இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Kanchana3 #RaghavaLawrence
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி'.
அதனைத் தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி' படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா' வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2' படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், மனோபாலா, சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
The much awaited MUNI 4 series – KANCHANA 3 by Raghava Lawrence is nearing completion of shooting and will release in April 2019.#Kanchana3
— Sun Pictures (@sunpictures) December 20, 2018
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 2019-ல் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். #Kanchana3 #RaghavaLawrence #Vedhika #Oviyaa
ராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காஞ்சனா 3’ படத்தை கோடை மாதத்தில் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Kanchana3
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியான படம் `முனி'. அதனைத் தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி' படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா' வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2' படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா ஆகியோர் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு பாடல் மட்டும் காட்சி படுத்தாமல் இருக்கிறார்கள்.
கோடையை குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் கொண்டாட ஒரு படம் வேண்டும் என்பதால், ஏப்ரல் மாதம் 18ம் தேதி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X