என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "11 new courses"
- 5 முதுநிலை படிப்புகளும், 6 இளநிலை படிப்புகளும் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது
- புதிய கட்டிடம் கட்ட அரசு ரூ.13 கோடி ஒதுக்கியுள்ளது.
கோவை,
கோவை புலியகுளத்தில் அரசு மகளிர் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 650க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
தற்போது இந்த கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல் உள்ளிட்ட படிப்புகள் கற்று கொடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில் இந்த கல்லூரியில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிதாக 11 பாடப்பிரிவுகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கல்லூரி முதல்வர் வீரமணி கூறியதாவது:-
தற்போது இந்த கல்லூரியில் புதிதாக 11 பாடப்பிரிவுகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 5 முதுநிலை படிப்புகளும், 6 இளநிலை படிப்புகளும் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி எம்.ஏ. தமிழ், எம்.ஏ. ஆங்கிலம், எம்.காம், எம்.எஸ்.சி. கனிணி அறிவியல், எம்.எஸ்.சி. கணிதம் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளும், பி.எஸ்.சி. அரசியல் அறிவியல், பி.எஸ்.சி. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
இந்த கல்லூரி தற்போது 9 அறைகள் கொண்ட பழைய மாநகராட்சி பள்ளியில் இயங்கி வருகிறது. இங்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால் ஷிப்ட் முறையில் வகுப்புகளை நடத்தி வருகிறோம். இப்போது பி.ஜி.திட்டங்களை தொடங்க எங்களிடம் போதுமான இடம் இல்லை. எனவே புதிய கட்டிடம் தயாரானதும் அங்கு புதிய படிப்புகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம். மேலும் அடுத்த ஆண்டுக்குள் கல்லூரிக்கு ஒரு புதிய கட்டிடம் கட்டப்படும். அதற்கு அரசு ரூ.13 கோடி ஒதுக்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்