search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 motorcycles theft"

    • சம்பவத்தன்று தனது வீட்டு முன்பு பைக்கை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
    • மறுநாள் காலையில பார்த்த போது பைக்கை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது.

    சின்னமனூர்:

    வீரபாண்டி வெங்கடாசல புரத்தை சேர்ந்தவர் மார்க்கண்டேயன் (வயது 39). சம்பவத்தன்று தனது வீட்டு முன்பு பைக்கை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில பார்த்த போது பைக்கை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    முத்துதேவன்பட்டியை சேர்ந்தவர் வீரமணி (31). செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தனது பைக்கை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து வீரபாண்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×