என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "25 years Jail"
- சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- குற்றம் சாட்டப்பட்ட வியாபாரிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
தேனி:
தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரிக்கு திருமணமாகி 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். இதில் தனது 13 வயது மகளுக்கு அவரது தந்தை அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் 2 மாதமாக சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்த னர். இந்த வழக்கு தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்கு களுக்கான சிறப்பு நீதிமன்ற த்தில் நடந்து வந்தது.
அரசு தரப்பில் வக்கீல் தவமணி செல்வி ஆஜராகி வாதாடினார். விசாரணை முடிந்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட வியாபாரிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தும் அந்த தொகையை கட்ட தவறினால் மேலும் 1½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்