என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 arrested"

    • ரிஷிவந்தியம் போலீசார் கெடிலம்கூட்டு்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும் தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்து ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் கெடிலம்கூட்டு்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கீழ்ப்பாடி கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் மாதவன் (வயது 19), ரிஷிவந்தியத்தை சேர்ந்த சாமுண்டி மகன் விஜயகுமார் (19) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரிந்தது. அவர்கள் கா.பாளையம் கிராமத்தில் உள்ள அமைச்சரம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1,122 மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    • மதுரை வைகை ஆற்றில் கொள்ளையடிப்பதற்காக பதுங்கியிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் மேற்கண்ட 4 பேரையும் திலகர்திடல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    மதுரை

    மதுரை வைகை தென்கரை பகுதியில் ஆயுதங்களுடன் 10 பேர் கும்பல் கொள்ளை யடிப்பதற்காக பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதையடுத்து மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சுவாதி ஆலோசனையின் பேரில், திலகர் திடல் இன்ஸ்பெக்டர் சங்கர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று காலை வைகை தென்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அனுமார் கோவில் படித்துறை பகுதியில் 10 பேர் கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

    அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். அவர்களில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் மேற்கண்ட 4 பேரையும் திலகர்திடல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    அவர்கள் சிம்மக்கல், வெங்கடசாமி அக்ரஹாரம் செந்தில்குமார் மகன் சந்தோஷ் (20), சிம்மக்கல் சுப்பையா பிள்ளை தோப்பு, பாரதி மகன் பூமிநாதன் (23), மேல அண்ணாதோப்பு, சுடுதண்ணீர் வாய்க்கால் தெரு, கதிரேசன் மகன் ராமர் என்ற யுவா ராம்குமார் (20), அவரது சகோதரர் லட்சுமணன் என்ற யுவராஜ்குமார் என்பது தெரியவந்தது. யுவராம்குமார், யுவராஜ்குமார் ஆகியோர் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அனுமதி யின்றி அரசு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
    • இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அனுமதி யின்றி அரசு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட துணை கண்காணிப்பாளர் தையல் நாயகி தலைமையிலான போலீசார் ஏற்காடு மலை கிராமங்களில் தீவிர சோதனை நடத்தினர்.

    இதில், கீரைக்காடு பகுதியில் மலர் கொடி என்பவரும், ஒண்டிக்கடை பகுதியில் சசிகலா என்பவரும், அரங்கம் கிராமத்தில் ராணி என்பவரும், பட்டிபாடி கிராமத்தில் சின்னம்மா என்ப வரும் அனுமதி இல்லாமல் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • 4 டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் அவர்களிடம் இருந்து 79 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மாவட்ட மேலாளர் பியோ தங்கதுரை தலைமையிலான மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் 4 டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். விருத்தாசலம் பகுதியில் சதீஷ் மற்றும் ஆனந்த், கச்சிராயநத்தம் பகுதியை சேர்ந்த குமார் மற்றும் பாலகொல்லையை சேர்ந்த துரைசாமி ஆகியோர் சட்ட விரோதமாக மதுவை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களை அதிரடியாக கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 79 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • வெண்ணந்தூர் அருகே உள்ள வடுகம்பாளையத்தில் சில தினங்களுக்கு முன்பு ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி நடந்தது.
    • ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் அருகே உள்ள வடுகம்பாளையத்தில் சில தினங்களுக்கு முன்பு ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி நடந்தது. அப்போது சப்பை யபுரத்தைச் சேர்ந்த அஜித் ( வயது 25) என்பவருக்கும் வடுகம்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் (25) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த வர்கள் இருவரையும் சமா தானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் மறுநாள் வடுகம்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர்கள் பெரியசாமி(27), ராஜேஸ்குமார் (28), ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த சபரி (18) ஆகியோர் அஜித் வீட்டுக்குச் சென்று அஜித் மற்றும் அவரது நண்பர் ஹரிஹரன் ஆகி யோரை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அஜித் மட்டும் ஹரிஹரன் இருவரும் ராசிபுரம் மற்றும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது பற்றி வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று சக்திவேல், பெரியசாமி, ராஜேஷ்குமார், சபரி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பிறகு அவர்களை ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.நீதிபதி உத்தரவின் பேரில் அவர்கள் 4 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

    • மாணிக்கம் (வயது 55). இவர் வீராணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் அம்மையப்பன் நகர் பகுதியில் வசித்து வந்தார்.
    • அங்கிருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி மனக்காடு குள்ளர் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 55). இவர் வீராணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் அம்மையப்பன் நகர் பகுதியில் வசித்து வந்தார். அங்கு குடியிருந்த வீட்டை காலி செய்யும் போது, பின்னர் எடுத்துக் கொள்ளலாம் என கருதி பாதி பொருட்களை அந்த வீட்டிலேயே வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மீதி பொருட்களை எடுக்க வீட்டிற்கு சென்றபோது, அங்கிருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மாணிக்கம் வீராணம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மாணக்கம் வீட்டில் கொள்ளையடித்தது மேட்டுப்பட்டி தாதனூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த சதீஸ்குமார் (27), சுரேஷ் (21), பரமசிவம் (27), கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சூர்யா (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  

    • அப்போது அங்கு இருந்த 4 இளம் வாலிபர்கள் திடீரென்று ஜோதி மணியை வழிமறித்தனர்.
    • வழுதலம்பட்டு காலனி சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே வடலூர் பார்வதிபுரம் சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 37). இவர் நேற்று வழுதலம்பட்டு செந்தாமரை வாய்க்கால் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த 4 இளம் வாலிபர்கள் திடீரென்று ஜோதி மணியை வழிமறித்தனர். பின்னர் ஜோதி மணியை தாக்கி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு, ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்து தப்பித்து சென்றனர். இதில் காயமடைந்த ஜோதிமணி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இது குறித்து ஜோதிமணி குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இதில் திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் சேர்ந்த சுரேஷ் ராகுல் (வயது 19), நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சேர்ந்த 18 வயது சிறுவன், திருப்பூர் மாவட்டம் சேர்ந்த 15 வயது சிறுவன், குறிஞ்சிப்பாடி வழுதலம்பட்டு காலனி சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • கடந்த 23-ந் தேதி இரவு ஆகாஷ் டேவிட் போலீசாருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டார்.
    • காயம் அடைந்த ஆகாஷ் டேவிட், கேத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    ஊட்டி,

    ஊட்டி அருகே உள்ள கேத்தி சாந்தூரைச் சேர்ந்தவர் ஆகாஷ் டேவிட் (வயது 26). இவர் ஊர்க்காவல் படையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 23-ந் தேதி இரவு இவர் போலீசாருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது கேத்தி பாலாடா திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த செல்வகுமார் (31) என்பவர் வீட்டு முன்பு சிலர் கூட்டமாக நின்று கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து கலைந்து போகச் செய்தனர்.

    அதன்பின்னர் ஊர்க்காவல் படை காவலரான ஆகாஷ் டேவிட், தனது நண்பர் வீட்டுக்கு சென்றார். அப்போது செல்வகுமார் மற்றும் அவரது நண்பர்களான ஜிசாந்த் (26), ஆரோக்கியசாமி (36), சத்தியசீலன் ஆகியோர் தகராறு செய்தனர். மேலும் ஆகாஷ் டேவிட்டையும் அவர்கள் அடித்து உதைத்து தாக்கினர்.

    இதில் காயம் அடைந்த ஆகாஷ் டேவிட், கேத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    • ரவிச்சந்திரன் (27), சூரம்பட்டி வலசு, அண்ணா வீதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (37) என்பது தெரியவந்தது.
    • திருவண்ணாமலையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

    ஈரோடு,

    ஈரோடு சூரம்பட்டி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சூரம்பட்டி வலசு, நேதாஜி ரோடு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர்களிடம் 1.200 கிலோ கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    விசாரணை யில் அவர்கள் வீரப்பன் சத்திரம் பகுதி யைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (27), சூரம்பட்டி வலசு, அண்ணா வீதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (37) என்பது தெரியவந்தது.

    மேலும் சட்டவிரோதமாக கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்து ரூ. 24 ஆயிரம் மதிப்பிலான 1.200 கிலோ கிராம் கஞ்சா மற்றும் பணம் ரூ. 700 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல, கடத்தூர் போலீசார், கோபியை அடுத்துள்ள சிங்கிரி பாளையம், மாதேஸ்வரன் தோட்டம் முன்பாக சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் இருவரும் திருவண்ணாமலையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் அவர்கள் இருவரும் நம்பியூர் மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (35), கோபி, ஒடையகவுண்ட ன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (32) என்பதும் தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து ரூ. 3,000 மதிப்பிலான 100 கிராம் கஞ்சா, பணம் ரூ. 1,500 மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெ க்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந்தே தி கூத்தக்–குடி காப்புக்காட்டில் ஜெகன்ஸ்ரீ கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு கிடந்தார்.
    • 4 பேரையும் போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதி–மன்ற நீதி–பதி கண்–ணன் முன்பு ஆஜர்–ப–டுத்தினர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருடைய மனைவி செந்தமிழ் செல்வி. இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். இவர்களுடைய மகன் ஜெகன் ஸ்ரீ (வயது 19)  இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூரில் உள்ள தனியார் பாலிடெ க்னிக் கல்லூரியில் மெ க்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந்தே தி கூத்கக்குடி காப்புக்காட்டில் ஜெகன்ஸ்ரீ கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு கிடந்தார்.    இதையடுத்து துணை போலீஸ் சூப்ரண்டு ரமேஷ் மற்றும் தாசில்தார் சத்தியநா ராயணன்ஆகியோர் முன்னிலையில் ஜெகன்ஸ்ரீ உடல் தோண்டி எடுக்கப்ட்டு பிரேத பரிசோதக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக ஜெகன் ஸ்ரீயை அதே ஊரை சேர்ந்த அங்கமுத்து மகன் அய்யப்பன் (32), மணிகண்டன் மகன் ஆகாஷ் (20), ரவிச்ந்திரன் மகன் அபிலரசன் (27), 17 வயது சிறுவன் ஆகியோர் மது பாட்டிலால் தாக்கியும், கத்தியால் கழுத்தை அறுத்–தும் கொலை செய்தது தெரியவந்தது.

    இதையத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்பு ஆஜர்படுத்தினர். அய்யப்பன், ஆகாஷ், அபிலரசன் ஆகிய 3 பேரையும் 15 நாள் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் அய்–யப்பன் உள்பட 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

    மேலும் 17 வயது சிறுவன், கடலூர் சாவடி பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். 

    • மதுரை அருகே குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • விசாரணையில் அவர்கள் வழிப்பறி செய்யும் நோகத்தில் சென்றது தெரியவந்தது.

    மதுரை

    மதுரை திலகர் திடல் போலீசார் பேச்சியம்மன் படித்துறை சந்திப்பில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது 2 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் பெரிய கத்தி ஒன்று இருந்தது. விசாரணையில் அவர்கள் வழிப்பறி செய்யும் நோகத்தில் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த பாசிங்காபுரம் காளியம்மன் கோவில் தெரு, பழனிவேல் மகன் பிரதீப் என்ற சுருட்டை (21), விளாங்குடி, டெம்சி காலனி மணி (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை திருப்பரங்குன்றம், பெரிய ரத வீதியைச் சேர்ந்த செல்வம் மகன் தமிழரசன் என்ற தமிழ் (வயது21). திருநகர், இலகுவனார் தெருவை சேர்ந்தவர் சிவா என்ற சிவபிரியன் (28). இவர்கள் 2பேர் மீதும் கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் அவர்கள் மீண்டும் குற்ற சம்பவத்தில் ஈடுபடுவதாக தெரியவந்தது. எனவே அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். அதன்படி தமிழரசன் என்ற தமிழ், சிவா என்ற சிவப்ரியன் ஆகிய 2பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் அவர்களை மதுரை மத்திய ஜெயிலில் அடைத்தனர். 

    • லாரி டிரைவர் மற்றும் வாலிபர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது.
    • லாரி டிரைவரை மீட்டு பொள்ளாச்சி கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கோவை,

    கோவை பொள்ளாச்சி அருகே ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் திருஞானசண்முகம் (வயது48). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் லாரியை கேரளாவுக்கு ஓட்டிச் சென்றார். அப்போது திவான்சாபுதூர்அம்மன் கோவில் அருகே சென்ற போது, சாமி கும்பிடுவதற்காக லாரியை ரோட்டில் இடது பக்கத்தில் நிறுத்தினார். அப்போது லாரியின் பின்னால் 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்தனர். இதையடுத்து அவர்கள் திருஞானசண்முகத்திடம் ஏன் லாரியை இங்கு நிறுத்தி இருக்கிறாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

    இதுதொடர்பாக லாரி டிரைவர் மற்றும் வாலிபர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த வாலிபர்கள் திருஞானசண்முகத்தை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கினர். மேலும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் லாரி டிரைவரை மீட்டு பொள்ளாச்சி கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து அவர் ஆனைமலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த பிராஜிஸ் (21), சிஜி (25), ராஜேஷ் (30), திணேஷ் (25) ஆகியோர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×