search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "45th Chess Olympiad"

    • ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும்.
    • பெண்கள் பிரிவில் 183 அணிகளும் 909 வீராங்கனைகளும் பங்கேற்கின்றன.

    செஸ் விளையாட்டில் மிகப்பெரிய போட்டியான செஸ் ஒலிம்பியாட் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் கடந்த 2022-ம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மிக குறுகிய காலத்தில் தமிழக அரசு சார்பில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது. சாதனை எண்ணிக்கையாக ஓபன் பிரிவில் 197 அணிகளும் 975 வீரர்களும், பெண்கள் பிரிவில் 183 அணிகளும் 909 வீராங்கனைகளும் பங்கேற்கின்றன.

    மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும். 11 சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் அளிக்கப்படும்.

    இந்நிலையில் செஸ் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தொடக்க ஆட்டத்தில் மொராக்கோவை எதிர்கொண்டது. இதில் 4-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றிபெற்றது. இந்திய பெண்கள் அணி முதல் ஆட்டத்தில் 3.5-0.5 என்ற கணக்கில் ஜமைக்காவை தோற்கடித்தது.

    • 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இன்று தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது.
    • இந்த போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 1½ மணி நேரம் ஒதுக்கப்படும்.

    புடாபெஸ்ட்

    செஸ் விளையாட்டில் மிகப்பெரிய போட்டியான செஸ் ஒலிம்பியாட் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் கடந்த 2022-ம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மிக குறுகிய காலத்தில் தமிழக அரசு சார்பில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது. சாதனை எண்ணிக்கையாக ஓபன் பிரிவில் 197 அணிகளும் 975 வீரர்களும், பெண்கள் பிரிவில் 183 அணிகளும் 909 வீராங்கனைகளும் பங்கேற்கின்றன.

    மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும். 11 சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் அளிக்கப்படும்.

    'ஸ்விஸ்' முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 1½ மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அத்துடன் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு நகர்வுக்கும் 30 வினாடி வீதம் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு சுற்றில் அணியில் 4 பேர், எதிரணியினருடன் மோதுவார்கள்.

    கடந்த முறை இந்திய அணி இரு பிரிவிலும் வெண்கலப் பதக்கத்தை வென்றது. இந்திய அணியில் டி.ஹரிகா, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மாற்று வீராங்கனையாக தானியா சச்தேவ் இருக்கிறார்.

    ஆண்கள் பிரிவில் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, குகேஷ் மற்றும் விதித் குஜராத்தி, அர்ஜூன் எரிகாசி, ஹரிகிருஷ்ணா ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள். போட்டித்தரநிலையில் 2-வது இடம் வகிக்கும் இவர்கள் மீதும் எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது.

    உலகின் 'நம்பர் ஒன்' வீரர் மாக்னஸ் கார்ல்சென் தனிப்பட்ட முறையில் எல்லா பட்டங்களையும் வென்று விட்டார். ஆனால் அணியாக செஸ் ஒலிம்பியாட் எட்டாக்கனியாக இருக்கிறது. அந்த ஏக்கத்தை தணிக்க இந்த முறை அவர் கடுமையாக முயற்சிப்பார்.

    ×