search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadu jeevitham"

    • 54- வது பெருமைக்குரிய கேரளம் மாநில விருதுக்கான பட்டியலை இன்று வெளியானது.
    • ஆடு ஜீவிதம் திரைப்படம் மொத்தம் 9 மாநில விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

    54- வது பெருமைக்குரிய கேரளம் மாநில திரைப்பட  விருதுக்கான பட்டியலை இன்று திருவனந்தபுரத்தில் கேரள கலாச்சார விவகாரதுறை அமைச்சர் சஜி செரியன் இன்று வெளியிட்டார்.

    சிறந்த நடிகருக்கான விருதை பிரித்விராஜ் ஆடுஜீவிதம் திரைப்படத்திற்காக வென்றுள்ளார்.

    இந்தாண்டு பிளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ், அமலாபால் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஆடு ஜீவிதம். இப்படத்திற்காக மிக கடுமையான உழைப்பை வெளிப்படுத்தி நடித்திருப்பார் பிரித்விராஜ்.

    இப்படத்திற்காக உடல் எடை குறைத்து , உண்மையில் அந்த பாலைவனத்தில் வாழ்ந்த ஒரு மனிதனாக நடித்து இருப்பார். திரைப்படம் தற்பொழுது நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    சிறந்த நடிகைக்கான விருதை `உள்ளொழுக்கு' படத்திற்காக ஊர்வசியும், தடவு திரைப்படத்திற்காக பீனா ஆர் வென்றுள்ளனர்.

    சில மாதங்களுக்கு முன் ஊர்வசி மற்றும் பார்வதி நடிப்பில் வெளியான திரைப்படம் உள்ளொழுக்கு. மாமியார் மற்றும் மருமகள் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தனர். இப்படம் அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    சிறந்த இயக்குனருக்கான விருதை ஆடுஜீவிதம் திரைப்படத்திற்காக பிளெஸ்ஸி வென்றுள்ளார். சிறந்த திரைப்படத்திற்கான விருதை மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த காதல் தி கோர் திரைப்படம் வென்றுள்ளது.

    ஆடு ஜீவிதம் திரைப்படம் மொத்தம் 9 மாநில விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

    மற்ற திரைத்துறைக்கான விருதுகளின் பட்டியல்


    சிறப்பு குறிப்பு-அபிநயா கிருஷ்ணன் (ஜெய்வம்) கே ஆர் கோகுல் (ஆடுஜீவிதம்), சுதி கோழிக்கோடு (காதல்)

    சிறப்பு நடுவர் (நடிப்பு) - கே.ஆர்.கோகுல் (ஆடுஜீவிதம்), சுதி கோழிக்கோடு (காதல்)

    சிறப்பு ஜூரி படம் - ககனாச்சாரி

    சிறந்த அறிமுக இயக்குனர் - பாசில் ரசாக் (தடவ்)

    பிரபலமான படம் - ஆடுஜீவிதம்

    நடனம் - விஷ்ணு (சுலைகா மன்சில்)

    சிறந்த பெண் டப்பிங் கலைஞர் - சுமங்கலா (ஜனம் 1947 - பிரணயம் துடாருன்னு)

    சிறந்த ஆண் டப்பிங் கலைஞர் - ரோஷன் மேத்யூ (உள்ளொழுக்கு), சிறந்த ஒப்பனை கலைஞர் - ரஞ்சித் அம்பாடி (ஆடுஜீவிதம்)

    ஒலி வடிவமைப்பு - ஜெயதேவ் சகடத், அனில் ராதாகிருஷ்ணன் (உள்ளொழுக்கு)

    ஒலிக்கலவை - ரசூல் பூக்குட்டி, சரத் மோகன் (ஆடுஜீவிதம்)

    ஒத்திசைவு ஒலி - ஷமீர் அகமது (ஓ பேபி)

    கலை இயக்கம் - மோகன்தாஸ் (2018)

    எடிட்டிங் - சங்கீதா பிரதாப் (லிட்டில் மிஸ் ராவ்தர்)

    பின்னணிப் பாடகி (பெண்) - ஆனி ஆமி (மங்களப்பூழுக்கும் - பசுவும் அற்புதவிளக்கும்)

    பின்னணிப் பாடகர் (ஆண்) - வித்யாதரன் மாஸ்டர் (பத்திரநானொரு கனவில் - ஜனம் 1947 - பிராணயம் துடருன்னு)

    சிறந்த இரண்டாவது படம் - இரட்டை

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த மார்ச் மாதம் ஆடு ஜீவிதம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • . தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ,இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

    1.ஆடு ஜீவிதம்

    மலையாள முன்னணி நடிகர்களுல் ஒருவர் பிரித்விராஜ். இவர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் ஆடு ஜீவிதம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்குனர் பிளெசி இயக்கினார். இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையிலும் ஆடு ஜீவிதம் என்ற நாவலை தழுவி இயக்கப்பட்டதாகும். படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதுவரை 160 கோடி உலகளவில் இத்திரைப்படம் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இரண்டுவருடம் ஒருவன் பாலை வந்த்தில் அடிமையாக வாழ்ந்து அங்கு இருந்து அவன் தப்பித்தானா இல்லையா என்பதே இப்படத்தின் கதைக்களமாகும். இப்படம் தற்பொழுது பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ்- இல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ,இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

    2. அஞ்சாமை

    நீட் தேர்வினால் நடுத்தர குடும்பமும், மாணவர்களும் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்ற கதையை அடிப்படையாக கொண்ட திரைப்படம் அஞ்சாமை. இப்படத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் இன்று சிம்ப்லி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    3. ரயில்

    பாஸ்கர் சக்தி இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ரயில், வட மாநிலத்தவர் புலம் பெயர்ந்து பிழைப்பிற்காக தமிழ் நாட்டிற்கு வருவதையும், அவர்கள் படும் கஷ்டத்தையும் இதனால் தமிழனின் மனப்பான்மை அவர்களின் மீது எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை நகைச்சுவையாகவும், சிந்திக்கும் வகையில் இயக்கி இருக்கிறார். இப்படம் இன்று டெண்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    4. லாந்தர்

    விதார்த் நடிப்பில் வெளியான லாந்தர் திரைப்படம் சிம்ப்லி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    5. தி அக்காலி

    முகமத் ஆசிஃப் ஹமீத் இயக்கத்தில் நாசர், தலைவாசல் விஜய், வினோத் கிஷன், ஸ்வயம் சித்தா, ஜெயகுமார் ஜானகிராமன் நடிப்பில் வெளிவந்த தி அக்காலி திரைப்படம் இன்று ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    6. காடுவெட்டி

    ஆர்கே சுரேஷ் நடிப்பில் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியானது காடுவெட்டி திரைப்படம். இப்படம் தற்பொழுது ஓடிடி தளமான அமேசான் ப்ரைம் இல் வெளியாகியுள்ளது.


     



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆடு ஜீவிதம் படம் மலையாள சினிமாவில் நீண்ட நாட்கள் எடுக்கப்பட்ட படமாகும்.
    • முதல் நாளிலயே இந்தியளவில் 7.5 கோடி வசூலித்துள்ளது.

    இயக்குனர் பிளெஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் , அமலாபால் நடிப்பில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளிவந்த படம் ஆடு ஜீவிதம். இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உண்டாக்கியது. படத்தை பார்த்துவிட்டு திரைப் பிரபலங்கள் படத்தை பாராட்டி வருகின்றனர்.

    பிருத்விராஜ் இப்படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் வரும் ஒரு காட்சிக்காக மூன்று நாட்கள் பட்டினி கிடந்து நடித்திருக்கிறார். ஆடு ஜீவிதம் படம் மலையாள சினிமாவில் நீண்ட நாட்கள் எடுக்கப்பட்ட படமாகும். இதற்கெல்லாம் சேர்த்து பலனாக படத்தின் வெற்றி உச்சத்திற்கு சென்றிருக்கிறது.

    படம் வெளியாகி முதல் நாளிலயே இந்தியளவில் 7.5 கோடி வசூலித்துள்ளது. மலையாளத் திரையுலகில் இதுவரை அதிகமாக வசூலித்த படங்களின் பட்டியலில் 6 வது இடத்தை பெற்று இருக்கிறது ஆடு ஜீவிதம்.

    இந்நிலையில், ஆடு ஜீவிதம் வெளியாகி 9 நாட்கள் ஆன நிலையில், உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.

    இதனால், படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

    • படம் வெளியாகி முதல் நாளிலயே 7.5 கோடி இந்தியாவில் வசூலித்துள்ளது
    • இப்படத்தில் வரும் ஒரு காட்சிக்காக மூன்று நாட்கள் பட்டினி கிடந்து நடித்திருக்கிறார்.

    கடந்த சில மாதங்களாகவே மலையாள சினிமாவின் புகழ் உச்சியில் இருக்கிறது. அதை தொடரும் விதமாக மார்ச் 28 ஆம் தேதி பிளெஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் , அமலாபால் நடிப்பில் வெளிவந்த படம் ஆடு ஜீவிதம். இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியது. படத்தை பார்த்துவிட்டு பலப் பிரபலங்கள் படத்தை பாராட்டி வருகின்றனர்.

    பிருத்விராஜ் இப்படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்துள்ளார் மேலும் இப்படத்தில் வரும் ஒரு காட்சிக்காக மூன்று நாட்கள் பட்டினி கிடந்து நடித்திருக்கிறார். ஆடு ஜீவிதம் படம் மலையாள சினிமாவில் நீண்ட நாட்கள் எடுக்கப்பட்ட படமாகும் . இதற்கெல்லாம் சேர்த்து பலனாக படத்தின் வெற்றி உச்சத்திற்கு சென்றிருக்கிறது.

    படம் வெளியாகி முதல் நாளிலயே 7.5 கோடி இந்தியாவில் வசூலித்துள்ளது. மலையாளத் திரையுலகில் இதுவரை அதிகமாக வசூலித்த படங்களின் பட்டியலில் 6 வது இடத்தை பெற்று இருக்கிறது ஆடு ஜீவிதம்.

    மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த ஆர்.டி.எக்ஸ், நேரு, பீஷ்மபரவம் போன்ற படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் ஆடு ஜீவிதம் படம் 7 நாட்களில் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தை படக்குழுவினர் நேற்று இந்தி சினிமாவின் முக்கிய பிரபலங்களுக்கும், முக்கிய இயக்குனர்களுக்கும் திரையிட்டனர். படத்தைப் பார்த்த பிரபலங்கள் ஆடு ஜீவிதம் படக்குழுவினரிடம் பாராட்டு மழையை பொழிந்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்திற்காக ஏற்கனவே பிருத்விராஜ் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் காட்சியளித்தார்.
    • இவ்வார இறுதியில் ஆடு ஜீவிதம் படம் 100 கோடி ரூபாயை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

    பிளஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால், கே.ஆர். கோகுல் ஜிம் ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளிவந்த படம் ஆடு ஜீவிதம். வெளியாகி மூன்று நாட்களிலே படம் 50 கோடிக்கு மேல் வசூலித்தது. தற்பொழுது வசூலில் 70 கோடி ரூபாயை நெருங்கியுள்ளது.

    இவ்வார இறுதியில் ஆடு ஜீவிதம் படம் 100 கோடி ரூபாயை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேமலு , மஞ்சும்மல் பாய்ஸ் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ரூ. 100 கோடி வசூலை குவித்த படங்கள் வரிசையில் ஆடு ஜீவிதம் இடம் பெறும் என்று கூறப்படுகிறது.

    ஆடு ஜீவிதம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தில் வரும் ஒரு நிர்வாண காட்சிக்காக நடிகர் பிருத்விராஜ் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பதை ஒளிப்பதிவாளர் கே.எஸ். சுனில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

    இப்படதிற்காக ஏற்கனவே பிருத்விராஜ் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் காட்சியளித்தார். அதுவும் நிர்வாண காட்சிற்காக பிருத்விராஜ் மூன்று நாள் பட்டினி கிடந்து நடித்து இருக்கிறார். அந்த காட்சி எடுக்கும் கடைசி நாளில் தண்ணீர் கூட அவர் குடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சரியான சாப்பாடு மற்றும் தண்ணீர் இல்லாமல் 2 வருடங்களுக்கு மேல் பாலைவனத்தில் இருந்து வாழ்ந்த ஒரு மனிதன் எப்படி இருப்பானோ அதை கச்சிதமாக திரையில் காண்பிக்க வேண்டும் என்பதற்காக உடலை வருத்தி நடித்து இருக்கிறார் பிருத்திவிராஜ். இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் இன்று பலன் கிடைத்து இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×