search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amaravati Cooperative Sugar Factory"

    • ஆலையை புனரமைக்க அரசு நிதி ஒதுக்கவில்லை.
    • விவசாயிகள் பலர் கரும்புகளுடன் வந்து கலந்து கொண்டனர்.

    திருப்பூர்,ஜூலை.11-

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த ஆலையை புனரமைக்க அரசு நிதி ஒதுக்கவில்லை.

    எனவே கடந்த சில ஆண்டுகளாக சிறிது சிறிதாக பிழித்திறன் இழந்து கடந்த ஆண்டு முற்றிலும் ஆலை இயங்காமல் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த ஆலையைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் கரும்பு விளைவதற்கு ஏற்ற நீர் வளம் மற்றும் நிலவளம் கொண்ட பகுதியாகும்.

    சிறப்பம்சம் கொண்ட இந்த ஆலை பராமரிப்பு இன்றி தற்போது இயங்கப்படாமல் இருப்பதால் கரும்பு விவசாயிகள், ஆலை தொழிலாளர்கள், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் மற்றும் அதனை சார்ந்துள்ளவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள னர் .

    எனவே மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி தமிழ்நாடு அரசு முழுமையாக ஆலையை புனரமைக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலு வலகம் முன்பாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    சங்கத்தின் மாவட்ட தலைவர் பால தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில செயலாளர் ரவீந்திரன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி பேசினார். விவசாயிகள் பலர் கரும்புகளுடன் வந்து கலந்து கொண்டனர்.

    ×