search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambani House Wedding"

    • மணமக்களுக்கு ஆசி வழங்கும் விழாவான 'சுப ஆசீர்வாத்' நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது.

    இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    அதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக திருமணத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் மணமக்களுக்கு ஆசி வழங்கும் விழாவான 'சுப ஆசீர்வாத்' நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி உள்பட திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் கலந்துக் கொண்டனர். ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளார். அப்போது, அம்பானிக்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கி அசத்தி இருக்கிறார்.

    இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    • 3 சூப்பர் ஸ்டார்கள் ஒரேமேடையில் பங்கேற்று 'நாட்டு நாட்டு' என்ற பாடலுக்கு நடனம் ஆடி அசத்தினர்.
    • தீபிகா படுகோன், ரன்வீர்சிங், ராணிமுகர்ஜி பங்கேற்பு

    தொழில் அதிபர் ஆனந்த் அம்பானி -ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழாவை முன்னிட்டு 2- ம் நாள் நிகழ்ச்சி நேற்று மாலை குஜராத் ஜாம்நகரில் உள்ள வீட்டில் நடந்தது.

    இந்தவிழாவில் பாலிவுட் பிரபலங்களின் கலைநிகழ்ச்சியில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றனர்.

    இதில் இந்தி பட சூப்பர் ஸ்டார்கள் ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் அமீர்கான் கலந்து கொண்டு ஒரே மேடையில் நடனம் ஆடினார்கள். ஆஸ்கார் விருது பெற்ற ஆர்.ஆர்.ஆர். படத்தில் வரும் 'நாட்டு நாட்டு' என்ற பாடலுக்கு நடனம் ஆடினார்கள். வண்ண குர்தா உடையில், 3 கான்கள் ஒரே பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடியது அனைவரையும் ஆச்சர்யபடுத்தியது. இதுதொடர்பான வீடியோக்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்தநிகழ்ச்சியில் பாஷில்சித்தார்த் மல்ஹோத்ரா, கியாராஅத்வானி, சைப் அலிகான், கரீனாகபூர், மாதுரி தீட்சித், வருண்தவான். அனன்யா பாண்டே, ஆதித்யாராய், ராணிமுகர்ஜி, தீபிகாபடுகோன், ரன்வீர்சிங், ரன்பீர்கபூர், ஆலியாபட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    ×