என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Anguish"
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே முத்துகிருஷ்ணாபுரம், பு. சித்தேரி, மேல மணக்குடி, தெற்குத்திட்டை, வடக்குத்திட்டை, புதுவராயன் பேட்டை ஆகிய கிராமங்களில் மழைநீரில் மூழ்கி சுமார் 400 ஏக்கருக்கு மேல் தண்ணீரில் மூழ்கி பயிர் முழுவதும் சேதமானது.புவனகிரி பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு இரவு முழுதும் பெய்த கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. அது மட்டுமின்றி முரட்டு வாய்க்கால் எனப்படும் பாசன வடிகால் வாய்க்கால் மற்றும் பெரும்பாலான பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால் வழியாக வயலில் இருக்கும் நீர் மழை காலங்களில் வடிவது வழக்கம். இந்த வடிகால் கால்வாயில் சில ஆண்டுகளாகவே சரியாக தூர் வராமல் மழைக்காலங்களில் கால்வாய் தண்ணீர் நிரம்பி சம்பா பயிர் செய்த வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சரியான வடிகால் வசதி இல்லாததால் நீர் வடிவதற்கு சில காலதாமதம் ஏற்படுகிறது.
இதனால் புவனகிரி அருகே உள்ள முத்து கிருஷ்ணாபுரம், பு. சித்தேரி, மேல மணக்குடி, தெற்கு திட்டை, வடக்கு திட்ர்டை, புதுவராயன் பேட்டை ஆகிய கிராமங்களில் சம்பா பயிர் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். முரட்டு வாய்க்கால் வடிகால் வாய்க்கால் மற்றும் பெரும்பாலான பாசன வடிகால் வாய்க்கால் முழுவதும் சம்பு, ஆகாயத்தாமரை பரவியிருப்பதால் தண்ணீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது. இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டுகள் முன் வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக அரசு இழப்பீடு தரம் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
- மனைவி பிரிந்து சென்ற வேதனையால் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
- இந்த நிலையில் மகேந்திரன் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
கடலூர்:
கடலூர் செம்மண்டல த்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 37) .டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி 8 வருடம் ஆகிறது. குழந்தை இல்லாததால் கடந்த 3வருடமாக மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் மகேந்திரன் மன உளைச்சலில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொ ண்டார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- பிளஸ் டூ வரை படித்துவிட்டு வீட்டில் சும்மா இருந்து வந்தார்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அருகே வி. மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தியின் மகன் ராஜேஷ் (வயது 21). இவர் பிளஸ் டூ வரை படித்துவிட்டு வீட்டில் சும்மா இருந்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்தது. எனவே சம்பவத்தன்று இவர் வேதனை தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்