search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anti-Child Labor Day"

    • ஜூன் 12-ந் தேதி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்.
    • இலக்கினை 2025-ம் ஆண்டிற்குள் அடைவோம் என்பது உறுதி.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    உலகெங்கும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி "குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்" கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

    கல்வி, விளையாட்டு என்று வாழ்க்கையை மகிழ்வுடன் வாழ வேண்டிய குழந்தை பருவத்தில், சில குழந்தைகள் தொழிலாளர்களாக குறைந்த கூலிக்கு நீண்ட நேரம் உழைப்பது மிகவும் கொடுமையான செயலாகும். இது அவர்களது எதிர்காலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும், ஊறுவிளைவிக்க கூடியதாகும்.

    பெற்றோர்களுக்கு போதிய வருமானம் இல்லாமையினாலும் குடும்ப சூழ்நிலைகளினாலும் குழந்தை தொழிலாளர்களாக மாறிய குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கு தரமான கல்வி அளித்திடவும், பெற்றோர்களின் சுமைகளை குறைத்திடவும், அரசு பல்வேறு நலத்திட்டங் களை செயல்படுத்தி வருகிறது.

    குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முன்னோடி மாநில மாக திகழ்கிறது.

    குழந்தைத் தொழிலாளர்கள் அற்ற சமுதாயத்தை உருவாக்கிட மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    குழந்தைத் தொழிலா ளர்கள் அற்ற சமுதாயத்தை உருவாக்கிட மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தற்போது, பொதுமக்களும் வேலை அளிப்போரும் இப்பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தவிர்த்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர்களும் அரசு அலுவலர்களும் தங்களது மாவட்டங்களை குழந்தைத் தொழிலாளர்கள் அற்ற மாவட்டமாக அறிவிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அரசின் இந்த சீரிய முயற்சிகளால் தமிழகமெங்கும் குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்ற இலக்கினை 2025-ம் ஆண்டிற்குள் அடைவோம் என்பது உறுதி.

    14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அனைத்து வகையான தொழில்களிலும் வேலைக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்களும், பணியில் அமர்த்த மாட்டோம் என வேலையளிப்பவர்களும் உறுதி பூண்டு, நம் நாட்டை வளமிக்க ஒன்றாக மாற்றுவோம் என சூளுரைப்போம். தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் முறை அற்ற மாநிலமாக மாற்றிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    குழுந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, குழுந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தலைமையில், குழந்தை தொழிலாளர் முறையினை அகற்று வதற்கான உறுதி மொழி யான 'இந்திய அரசிய லமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தை களின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக் குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வ தை ஊக்குவிப்பேன் எனவும்,

    குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்து வேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்று வதற்கு என்னால் இயன்ற வரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறு கிறேன்" என அனைத்து த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மாவட்ட கலெக்டரை பின் தொடர்ந்து வாசித்து உறுதி மொழியை ஏற்றுக்கொ ண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம் மற்றும் வாகனங்களில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களையும் ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியினையும் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோ ஷினி சந்திரா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுபாப்பு திட்டம்) குமரன், தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞான சம்பந்தம், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் சுப்பிரமணியம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் மற்றும் அனைத்துத்துறை அலு வலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×