search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arjun Babuta"

    • 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது.
    • ஆரம்பத்தில் அபாரமாக செயல்பட்ட பாபுதா இறுதிகட்டத்தில் தடுமாறினார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றுக்கான தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் பாபுதா பங்கேற்றார். இதில் பாபுதா சிறப்பாக செயல்பட்டு 630.1 புள்ளிகள் பெற்று 7-வது இடம் பிடித்தார். இதன்மூலம் அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இந்நிலையில், இறுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஆரம்பத்தில் அபாரமாக செயல்பட்ட பாபுதா இறுதிகட்டத்தில் தடுமாறியதால் 208.4 புள்ளிகள் மட்டுமே பெற்று 4-வது இடம் பிடித்தார்.

    7-வது ரவுண்டின் முடிவில் குரோஷியாவின் மீரான் மரிசிச் 209.8 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு (8-வது ரவுண்ட்) தகுதி பெற்றதால் அர்ஜுன் பாபுதா 208.4 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்து நூலிழையில் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பை தவறவிட்டு போட்டியில் இருந்து வெளியேறினார்.

    • இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்று போட்டி நடந்தது.
    • ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் அர்ஜூன் பாபுதா வென்றார்.

    பாரீஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பாபுதா பங்கேற்றார்.

    இந்தப் போட்டியில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும்.

    இதில் பாபுதா சிறப்பாக செயல்பட்டு 630.1 புள்ளிகள் பெற்று 7-வது இடம் பிடித்தார். இதன்மூலம் அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். மற்றொரு இந்திய வீரரான சந்தீப் சிங் 12-வது இடத்தைப் பிடித்து வெளியேறினார்.

    நாளை மதியம் 3.30 மணியளவில் இறுதிப்போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×