search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Athikanoor Govt Primary School"

    • 19 ஆண்டுகளாக கவிதேவி என்ற ஆசிரியை பணியாற்றி வந்தார்.
    • பெற்றோர்கள், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்துள்ளனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள அத்திகானூர் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் அத்திகானூர் சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் ஒரு ஆசிரியையும், ஒரு ஆசிரியரும் மற்றும் தற்காலிக ஆசிரியர் ஆகிய 3 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த பள்ளியில் கடந்த 19 ஆண்டுகளாக கவிதேவி என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    தற்போது தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கவிதேவி மத்தூரில் உள்ள அரசு பள்ளிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து தகவலறிந்த அந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அதே ஆசிரியையை மீண்டும் அதே பள்ளிக்கு ஆசிரியையாக நியமிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்து உள்ளனர்.

    இதுகுறித்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கூறும்போது, `அத்திகானூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த 19 ஆண்டுகளாக கவிதேவி என்ற ஆசிரியை பணியாற்றி வந்தார்.

    தற்போது நடைபெற்ற கலந்தாய்வு மூலம் அந்த ஆசிரியைக்கு மத்தூரில் பணிஇடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்தது. இந்த ஆசிரியை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து நல்ல முறையில் பாடம் கற்பித்து வருவதால் அவரை பணிஇடமாற்றம் செய்தால், எங்கள் குழந்தைகளின் கல்வி பெரிதளவில் பாதிக்கப்படும்.

    மேலும், அடுத்துவரக்கூடிய ஆசிரியர்கள் இதுபோன்று நல்ல முறையில் கல்வி பயின்றுவிப்பார்களா? என்பது சந்தேகம் தான். எனவே, இந்த ஆசிரியை பணிஇடமாற்றம் செய்யக்கூடாது. உடனே அவரை மீண்டும் அத்திகானூர் அரசு பள்ளிக்கே பணியாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    ×