search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Atiperuk"

    • வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நாளை வைகை பெருவிழா நடக்கிறது.
    • தூய்மையை பராமரிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    மதுரை

    மதுரையை தலைமையிட–மாக கொண்டு வைகை நதி மக்கள் இயக்கம் இயங்கி வருகிறது. இந்த இயக்கம் கடந்த 8 ஆண்டுகளாக தூய்மையான வைகை என்ற இலக்கை நோக்கியும், நீர் நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விழிப்பு–ணர்வை ஏற்படுத்தவும், அதன் தூய்மையை பராம–ரிக்கவும் பல்வேறு பணி–களை தொடர்ந்து செயல்ப–டுத்தி வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக வைகை பெருவிழா நான் காம் ஆண்டு நிகழ்ச்சி நாளை (3-ந்தேதி, வியாழக் கிழமை) நடைபெறுகிறது. ஆடிப்பெருக்கை ஆற்றில் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் வைகை ஆற்றில் சித்திரை திருவிழாவின் போது, கள்ளழகர் இறங்கும் ஆற்றங்கரையில் மாலை 4.30 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடை–பெற இருக்கிறது.

    நிகழ்ச்சிக்கு வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப் பாளர் வைகை எம்.ராஜன் தலைமை தாங்குகிறார். மேயர் இந்திராணி குத்து–விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். இதில் தமிழ் நாடு சேவாபாரதி ராதா, சின்மயா மிஷன் திலகர், புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ., கிழக்கு மண்டல தலைவர் முகேஷ் சர்மா, மேற்கு மண்டல தலைவர் வாசுகி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலவர் திருமாறன் உள்ளிட்டோர் பங்கேற்கி–றார்கள்.

    இதுபற்றி வைகை நதி மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் வைகை எம்.ராஜன் கூறுகை–யில், ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி. நமது வாழ்வாதாரமான ஆறுகளை ஆடி மாதத்தில் போற்றி வணங்கக்கூடிய மரபு பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. மக்க–ளுக்கு அதனை உணர்த்தும் விதமாக வைகை ஆற்றங்க–ரையில் பாரம்பரிய விளை–யாட்டுகள் விளையாடி, வைகை ஆற்றுடன் உணர் வுப்பூர்வமாக உறவை ஏற்ப–டுத்திக்ெகாள்ள நல் வாய்ப்பை ஏற்படுத்தி தருகி–றது.

    நதி பாதுகாப்பின் அவசி–யம் குறித்த சொற்பொழிவு, நாட்டிய அஞ்சலி மற்றும் வைகை நதி தீபாராதனை, வைகை நதியை பாதுகாப் போம் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்வோடு விழா நிறைவு பெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறி–னார்.

    ×