என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Auto theft"
- மது போதையில் இருந்ததால் அவர் முத்தையாபுரத்தில் இறங்காமல் இருந்து விட்டாராம். பின்னர் அவரை பஸ்சின் நடத்துனர் ஆறுமுகநேரியில் இறக்கி விட்டுள்ளார்.
- முத்தையாபுரத்திற்கு சென்று விட நினைத்த அவர் ஒவ்வொரு லோடு ஆட்டோவில் ஏறி அதனை எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதிநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவருக்கு சொந்தமாக லோடு ஆட்டோ உள்ளது.
சம்பவத்தன்று அதிகாலையில் இவர் தனது லோடு ஆட்டோவை மெயின் பஜார் ஆட்டோ நிறுத்தம் அருகே நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்க்கும்போது அங்கு அவரது லோடு ஆட்டோ காணாமல் போயிருந்தது.
உடனடியாக அவர் இதுபற்றி ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.
இதன் மூலம் லோடு ஆட்டோவை திருடி ஓட்டிச் சென்ற நபர் முத்தையாபுரம் தோப்புதெருவை சேர்ந்த சூரியபிரகாஷ் (23) என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
சூரியபிரகாஷின் சொந்த ஊர் அருப்புக்கோட்டை ஆகும். இவர் முத்தையாபுரத்தில் தங்கி இருந்து கூலி தொழில் செய்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்ற இவர் சம்பவத்தன்று இரவு முத்தையாபுரத்திற்கு பஸ்சில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது மது போதையில் இருந்ததால் அவர் முத்தையாபுரத்தில் இறங்காமல் இருந்து விட்டாராம். பின்னர் அவரை பஸ்சின் நடத்துனர் ஆறுமுகநேரியில் இறக்கி விட்டுள்ளார். அங்கிருந்து மீண்டும் முத்தையாபுரத்திற்கு செல்ல சூரியபிரகாஷிடம் பணம் இல்லாத நிலையில் அவர் திணறியுள்ளார். அப்போது அருகில் சில லோடு ஆட்டோக்கள் நின்று உள்ளன. இதில் ஒன்றை திருடி முத்தையாபுரத்திற்கு சென்று விட நினைத்த அவர் ஒவ்வொரு லோடு ஆட்டோவில் ஏறி அதனை எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். ஆனால் சாவி இல்லாததால் அவரது முயற்சி பலிக்கவில்லை.
இதனால் லோடு ஆட்டோவின் வயர்களை வெட்டி இணைத்து முயன்றதால் மற்றொரு லோடு ஆட்டோ ஸ்டார்ட் ஆகி உள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சூரியபிரகாஷ் உற்சாகமாக அந்த ஆட்டோவை முத்தையாபுரத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். அவரை கைது செய்த போலீசார் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் ஆட்டோ ஓட்டிவந்தார். கடந்த 3-ந்தேதி அவர் திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையின் வெளியே ஆட்டோவை நிறுத்தி விட்டு உறவினரை பார்க்க ஆஸ்பத்திரிக்குள் சென்றார். திரும்பி வந்தபோது ஆட்டோ மாயமாகி இருந்தது. அதனை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவை திருடி சென்ற நடுக்குத்தகை பகுதியை சேர்ந்த பழனிசாமி, அபினேஷ் ஆகிய 2பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்