search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awadi"

    • குண்டும், குழியுமான சாலைகளால் ராமேசுவரம் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
    • தேசிய நெடுஞ்சாலைத்துறையும் பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    ராமேசுவரம்

    இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத்தில் பிரசித்தி பெற்றது ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலாகும். இங்கு தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.

    இதே போல் பிரசித்த பெற்ற தனுஷ்கோடி, அப்துல்கலாம் நினைவு மண்டபம் போன்றவை காண நாள்தோறும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் நகரில் வாகனப் பெருக்கமும் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ப சாலைவசதிகள் ராமேசுவரத்தில் இல்லை என்பது கவலைக்குறியது.

    ராமேசுவரத்தில் 35 ஆயித்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலான பகுதிகளில் குறைந்த அளவே அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதே போல் ராமேசுவரம் நகருக்கு வரும் யாத்திரீகர்கள், சுற்றுலா பயணிகள் ரெயில், பஸ் நிலையங்களில் இருந்து அரசு பஸ் மற்றும் ஆட்டோக்கள் மூலம் கோவிலுக்கு செல்கின்றனர்.

    ஆனால் ராமேசுவரத்தில் உள்ள முக்கிய சாலைகள் போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் ராமேசுவரம் சாலையில் பயணம் என்பது சாகச பயணமாக மாறி வருகிறது. பள்ளத்தல் ஏறி, இறங்கும் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதும், இதில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் படுகாயமடைவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    ராமேசுவரம் நகரில் பாதாள பணிக்காக பல்வேறு பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. திரும்பிய திசை எல்லாம் குண்டும், குழியுமாக இருப்பதால் போக்குவரத்து என்பது சிரமாக மாறி உள்ளது. ராமேசுவரம் லட்சுமண தீர்த்தம் முதல் திட்டக்குடி கார்னர் நகராட்சி அலுவலகம் வரை 2 பகுதிகளிலும் பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த சாலைகளில் கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் என்ற நிலையில் வாகனங்கள் சென்று வருகிறது.

    ராமேசுவரத்தில் அவல நிலையை போக்க மாவட்ட நிர்வாகமும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறையும் பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    இந்தியாவில் ஆன்மீக நகரங்களில் முக்கியமானதாக உள்ள ராமேசுவரத்தில் தரமான சாலை அமைத்து போக்குவரத்திற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் அமைச்சர், தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×