என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bala Krishnan"
- மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.
- ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறைகூவல் விடுத்துள்ளது.
தஞ்சாவூா்:
ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளா் பால கிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு 2 மாநிலங்களுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இந்த பட்ஜெட் நகலை நாடு முழுவதும் எரிக்கும் போராட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறைகூவல் விடுத்துள்ளது.
இதன்படி, தமிழ்நாட்டில் 2 ஆயிரம் கிராமங்களில் 1 லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்தை வருகிற 31-ந்தேதி நடத்து வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 9-ந்தேதி வெள்ளையனே வெளியேறு நாளை கடைப்பிடிக்கும் விதமாக காா்பரேட்டுகளே இந்தியாவை விட்டு வெளியேறு என்ற கோரிக்கையை முன் வைத்து மாநிலம் முழுவதும் மாவட்ட, வட்ட தலைமையிடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்துவது, இயற்கையை பாதுகாப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 17-ந்தேதி தூத்துக்குடி, சேலம், திருவாரூா், செங்கல்பட்டு ஆகிய 4 இடங்களில் கருத்தரங்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த போராட்டங்களுக்கு இந்தியா கூட்டணி கட்சியினா் ஆதரவு அளிக்கு மாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலை சென்றபோது போலீஸ் அதிகாரியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயல் பாதிப்பில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. தமிழ்நாடு முழுவதும் இருந்து அங்குள்ள மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.
அரசு நிர்வாகம் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் அங்கு முகாமிட்டு தேவையான உதவிகளை செய்கின்றனர். நான் கூட 3 நாட்கள் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு எங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்தோம். அங்குள்ள மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கண்ணீரும், கம்பலையுமாக உள்ளனர்.
ஆனால் மத்திய மந்திரியாக உள்ள பொன்.ராதாகிருஷ்ணன் புயல் பாதித்த பகுதிக்கு செல்லவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்து புயல் நிவாரண உதவி கேட்ட போது பொன்.ராதாகிருஷ்ணனும் டெல்லி சென்றிருக்க வேண்டும்.
குறுகிய மலைப்பாதையாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று போலீஸ் அதிகாரி எடுத்து கூறுகிறார். ஆனால் அவருடன் வந்த ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்வதை பொன்.ராதாகிருஷ்ணன் வேடிக்கை பார்க்கிறார். இது நியாயமா?
ஒன்றுமில்லாத இந்த பிரச்சனைக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடையடைப்பு நடத்த வைக்கிறார். இது தேவையா? புயல் பாதிப்பை திசை திருப்பும் செயலாகத்தான் இதை கருத வேண்டி உள்ளது.
அவர் சபரிமலைக்கு செல்வதை நான் குறை கூறவில்லை. அது அவரது தனிப்பட்ட விசயம். ஆனால் புயல் பாதிப்பில் 12 மாவட்டங்கள் சீர்குலைந்து கிடக்கும் நிலையில் அந்த மாவட்ட மக்களுக்கு உதவாமல் சபரிமலை சென்று சர்ச்சையில் ஈடுபடுவது நியாயமா? என்றுதான் கேட்கிறோம்.
மக்கள் மீது அவருக்கு உண்மையான அக்கறை இருந்தால் சபரிமலை பயணத்தை ரத்து செய்து விட்டு பிரதமரை சந்தித்து தமிழக நிவாரணத்துக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தி இருக்க வேண்டும். அதை பொன்.ராதாகிருஷ்ணன் செய்யவில்லை.
இந்த விசயத்தில் பொன். ராதாகிருஷ்ணன் நடந்து கொண்ட செயல் முழுக்க முழுக்க சரியில்லை.
இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #BalaKrishnan #Sabarimala
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்