search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bodybuilding"

    • 19 வயதிலேயே பயிற்சியின் மூலம் தேர்ந்த பாடி பில்டருக்கான உடல் வாகுவை கொண்டிருப்பதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்
    • பிரேசிலில் நடந்த பல்வேறு பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்று பிரபலமானார்

    பிரேசிலை சேர்ந்த 19 வயது பாடி பில்டர் மத்தேயூஸ் பாவ்லக் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த வளர்ந்து வரும் பாடி பில்டிங் நட்சத்திரமான இருந்து வந்த மத்தேயூஸ் பாவ்லக் [Matheus Pavlak] 19 வயதிலேயே பயிற்சியின் மூலம் தேர்ந்த பாடி பில்டருக்கான உடல் வாகுவை கொண்டிருப்பதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்தனர். 5 வருடங்களுக்கு முன்னர் நடந்த உடல் பருமன் கொண்டவர்கள் எடையை குறைக்கும் போட்டியில் பங்கெடுத்த மத்தேயூஸ் அதிலிருந்த்து தனது பாடி பில்டிங் ஆர்வத்தை பெற்றார்.

     

    பிரேசிலில் நடந்த பல்வேறு பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்று புகழை சம்பாதித்த மத்தேயூஸ் பிரேசிலின் சாண்டா காத்ரீனா மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து கடந்த ஞாயிறு மதியம் மாரடைப்பு  ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மத்தேயூசின் மரணம், உடலை அசாதாரணமாக மாற்ற பாடி பில்டிங் பயிற்சியில் பயன்படுத்தப்படும் அனபாலிக் ஸ்டெராய்ட்களின் [ஊக்கமருந்துகளின்] பாதுகாப்புத் தன்மை மீதான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மத்தேயூசும் இவ்வளவு இளம்வயதில் அவரின் அசாதாரண உடல்வாகைப் பெற இதுபோன்ற ஸ்டெராய்ட்களை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 

    • பாடிபில்டிங் அமைப்பு தொடக்க விழா நடந்தது.
    • அரசு வேலைகளில் ஒதுக்கீடு வழங்க கோரிக்கை வைக்கப்படும் என்றார்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி தாப்பா கார்டனில் பாடிபில்டிங்கின் சிவகங்கை மாவட்ட பிஸிக் அலையன்ஸ் தொடக்க விழா நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் டாக்டர் பிரபு வரவேற்றார். நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கினார்.முன்னாள் மிஸ்டர் இந்தியா மற்றும் தமிழ்நாடு பிஸிக் அலை யன்ஸ் தலைவருமான பொன்னம்பலவாணன் முன்னிலை வகித்தார்.

    நடிகரும் பாடிபில்டிங் பயிற்சியாளருமான பரத்ராஜ் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார்.

    இதில் நகர்மன்ற தலைவர் முத்துதுரை பேசுகையில், விளையாட்டு வீரர்களுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்தி ட்டங்களை செயல்படுத்தி வருகிறது.விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டந்தோரும் விளையாட்டு.மைதா னங்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார்.

    மாவட்ட தலைவர் டாக்டர்.பிரபு பேசும்போது, பாடிபில்டிங்கில் உச்ச போட்டியான ஒலிம்பி யாவில் கலந்து கொள்வதற்கு முதல்படி இந்த மாவட்ட பிஸிக் அலையன்ஸ் அமைப்பாகும்.இதன்மூலம் மாவட்ட, மாநில, தேசிய, உலக போட்டிகளில் வீரர்கள் கலந்துகொள்ள முடியும்.சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே நடந்த பாடிபில்டிங் போட்டிகளை நமது மாவட்டத்திலும் வரும் காலங்களில நடத்துவோம்.இதன்மூலம் பாடிபில்டி ங்கில் அதிகளவு இளைஞர் களை கவர முடியும்.மேலும் பாடிபில்டிங் வீரர்களுக்கு அரசு வேலைகளில் ஒதுக்கீடு வழங்க கோரிக்கை வைக்கப்படும் என்றார்.

    தொழிலதிபர் பி.எல்.பி.பெரியசாமி வாழ்த்துரை வழங்கினார்.

    இதில் துணை தலைவர் ராமசாமி, பொருளாளர் காளிதாசன், சட்ட ஆலோசகர் கமல்தயாளன், தொழிலதிபர்கள் விசாலம் சிட்பண்ட்ஸ் உமாபதி, மகரிஷி கல்வி குழுமம் அஜய்யுக்தேஷ், ஐயப்பா டெக்ஸ்டைல்ஸ் சுந்தர், சூர்யா அரிசி ஆலை கணேஷ் கிருஷ்ணன், மூன்ஸ்டார் லெட்சுமணன், எஸ்.எல்.பி பிரிண்டர்ஸ் சரவணன், நகர்மன்ற உறுப்பினர் ஹரிதாஸ், மல்லீஸ் கிச்சன் திருப்பதி, கங்க அம்பரீஷ், உள்பட அலையன்ஸின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    மாவட்ட பொதுச் செயலாளர் கார்த்திகேயன் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

    ×