search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "box office"

    • , 2024 ஆம் ஆண்டின் நம்பர் 1 ஓப்பனிங் திரைப்படமாக வரலாறு படைத்துள்ளது.
    • இந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வசூலித்த படங்களின் பட்டியலில் இப்படம் இடம் பெற்றுள்ளது.

    உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் 'டெட்பூல் & வால்வரின்' படத்தை திரையரங்குகளில் கொண்டாடி அதிரடி காட்டி வருகின்றனர். இதற்கு சான்று இந்தப் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல்தான். இந்த படம், அதன் தொடக்க வார இறுதியில் உலகெங்கிலும் ரூ. 3650 கோடிகள் வசூலித்து, 2024 ஆம் ஆண்டின் நம்பர் 1 ஓப்பனிங் திரைப்படமாக வரலாறு படைத்துள்ளது.

    மேலும் தற்பொழுது திரைப்படம் வெளியாகி இரண்டு வாரம் கடந்த நிலையில் திரைப்படம் 1 பில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது நம் இந்திய மதிப்பில் 8000 கோடி மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வசூலித்த படங்களின் பட்டியலில் இப்படம் இடம் பெற்றுள்ளது. மார்வல் யூனிவர்சில் இடம் பெற்றுள்ள ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் திரைப்படத்திற்கு அடுத்து இப்படம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சிறந்த கேமியோஸ், நகைச்சுவை, ஆக்ஷன் மற்றும் பல கமர்ஷியல் பொழுதுபோக்கு விஷயங்களுடன் இந்தத் திரைப்படம் பார்வையாளர்களுக்குப் பிடித்த ஒன்றாக மாறியுள்ளது.

    மார்வெல் ஸ்டுடியோவின் 'டெட்பூல் & வால்வரின்' ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரசிகர்கள் 'டெட்பூல் & வால்வரின்' படத்தை திரையரங்குகளில் கொண்டாடி அதிரடி காட்டி வருகின்றனர்.
    • 2024 ஆம் ஆண்டின் நம்பர் 1 ஓப்பனிங் திரைப்படமாக வரலாறு படைத்துள்ளது.

    உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் 'டெட்பூல் & வால்வரின்' படத்தை திரையரங்குகளில் கொண்டாடி அதிரடி காட்டி வருகின்றனர். இதற்கு சான்று இந்தப் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல்தான். இந்த படம், அதன் தொடக்க வார இறுதியில் உலகெங்கிலும் ரூ. 3650 கோடிகள் வசூலித்து, 2024 ஆம் ஆண்டின் நம்பர் 1 ஓப்பனிங் திரைப்படமாக வரலாறு படைத்துள்ளது.

    இந்தியாவில் 'டெட்பூல் 1' (40.79 கோடி ஜிபிஓசி) மற்றும் 'டெட்பூல் 2' (69.94 கிஆர் ஜிபிஓசி) ஆகிய இரண்டின் வாழ்நாள் வசூலை, 'டெட்பூல் & வால்வரின்' திரைப்படத்தின் முதல் வார இறுதி வசூல் முறியடித்துள்ளது. அதாவது, ரூ. 83.28 கோடி வசூலித்துள்ளது. வரவிருக்கும் நாட்களில் இன்னும் அதிகமாகும் என்பதை எதிர்பார்க்கலாம்.

    சிறந்த கேமியோஸ், நகைச்சுவை, ஆக்ஷன் மற்றும் பல கமர்ஷியல் பொழுதுபோக்கு விஷயங்களுடன் இந்தத் திரைப்படம் பார்வையாளர்களுக்குப் பிடித்த ஒன்றாக மாறியுள்ளது.

    மார்வெல் ஸ்டுடியோவின் 'டெட்பூல் & வால்வரின்' ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படம் நேற்று வெளியாகி உலகமெங்கும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • உலகளவில் முதல் நாளில் 100 மில்லியன் டாலரை வசூலித்துள்ளது

    மார்வல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தற்பொழுது அந்த வரிசையில் டெட்பூல் & வோல்வரின் திரைப்படம் அடுத்ததாக இடம் பெற்றுள்ளது.  இப்படம் நேற்று வெளியாகி உலகமெங்கும் உள்ள ரசிகர்களால்  கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஆங்கிலத்தில் மட்டும் இல்லாமல் இப்படத்திற்கு ஐதராபாதில் கட் அவுட், பேனர் என நம்மூர் ஹீரோக்களுக்கு வழிபாடு நடத்தும் வகையில் மக்கள் கொண்டாடினர். இத்திரைப்படம் ஆக்ஷன் மற்றும் காமெடியில் பட்டையை கிளப்பியுள்ளது.

    ரியான் ரெனால்ட்ஸ் டெட்பூலாகவும், ஹுக் ஜாக்மேன் வோல்வரினாகவும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் பதிந்துள்ளனர். இந்தியாவில் இப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் 20 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. உலகளவில் முதல் நாளில் 100 மில்லியன் டாலரை வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நமது இந்திய மதிப்பில் 830 கோடி ரூபாய்க்கு மேல் ஆகும் .

    இதன் மூலம் மார்வெல் திரைப்படம்  முதல் நாளில் இந்தியாவில் அதிக வசூல் செய்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம், ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் மற்றும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆப் மேட்னஸ் வரிசையில் தற்பொழுது டென்பூல் & வோல்வரின் இணைந்துள்ளது.

    தமிழ் டப்பிங் பணிகள் இப்படத்திற்கு சிறப்பாக செய்துள்ளனர், படத்தில் வரும் அனைத்து நகைச்சுவ காட்சிகளும் நொர்க் அவுட் ஆகியுள்ளது. நீங்கள் ஒரு மார்வல் மற்றும் டெட்பூல் & வோல்வரின் ரசிகனாக இருந்தால் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இப்படம் இருக்கும், திரையரங்களில் பார்க்க தவறவிடாதீர்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படம் வெளியாகி முதல் நாளிலயே 7.5 கோடி இந்தியாவில் வசூலித்துள்ளது
    • இப்படத்தில் வரும் ஒரு காட்சிக்காக மூன்று நாட்கள் பட்டினி கிடந்து நடித்திருக்கிறார்.

    கடந்த சில மாதங்களாகவே மலையாள சினிமாவின் புகழ் உச்சியில் இருக்கிறது. அதை தொடரும் விதமாக மார்ச் 28 ஆம் தேதி பிளெஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் , அமலாபால் நடிப்பில் வெளிவந்த படம் ஆடு ஜீவிதம். இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியது. படத்தை பார்த்துவிட்டு பலப் பிரபலங்கள் படத்தை பாராட்டி வருகின்றனர்.

    பிருத்விராஜ் இப்படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்துள்ளார் மேலும் இப்படத்தில் வரும் ஒரு காட்சிக்காக மூன்று நாட்கள் பட்டினி கிடந்து நடித்திருக்கிறார். ஆடு ஜீவிதம் படம் மலையாள சினிமாவில் நீண்ட நாட்கள் எடுக்கப்பட்ட படமாகும் . இதற்கெல்லாம் சேர்த்து பலனாக படத்தின் வெற்றி உச்சத்திற்கு சென்றிருக்கிறது.

    படம் வெளியாகி முதல் நாளிலயே 7.5 கோடி இந்தியாவில் வசூலித்துள்ளது. மலையாளத் திரையுலகில் இதுவரை அதிகமாக வசூலித்த படங்களின் பட்டியலில் 6 வது இடத்தை பெற்று இருக்கிறது ஆடு ஜீவிதம்.

    மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த ஆர்.டி.எக்ஸ், நேரு, பீஷ்மபரவம் போன்ற படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் ஆடு ஜீவிதம் படம் 7 நாட்களில் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தை படக்குழுவினர் நேற்று இந்தி சினிமாவின் முக்கிய பிரபலங்களுக்கும், முக்கிய இயக்குனர்களுக்கும் திரையிட்டனர். படத்தைப் பார்த்த பிரபலங்கள் ஆடு ஜீவிதம் படக்குழுவினரிடம் பாராட்டு மழையை பொழிந்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2005 இல் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படம் மக்களால் மிகவும் கொண்டாடப்படுகிறது.
    • தமிழகத்தில் மட்டும் 52 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

    இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் பிப்ரவரி 22-ஆம் தேதி வெளியான படம் மஞ்சும்மல் பாய்ஸ். படம் வெளியாகி 26 நாட்களான நிலையில் உலகளவு வசூலில் 200 கோடி வசூல் செய்துள்ளது. மலையால சினிமா திரையுலகில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமை மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு கிடைத்துள்ளது. படம் வெளிவந்து ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் இப்படம் 200 கோடி வசூலிக்கப்பட்டது மிகவும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது. இந்தியா பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் மட்டும் 110 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 52 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

    2005-ல் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படம் மக்களால் மிகவும் கொண்டாடப்படுகிறது. நண்பர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் போது குணா குகையில் அவர்களின் நண்பன் ஒருவன் மாட்டிக் கொள்கிறான். அவனுக்கு அடுத்து என்ன ஆகிறது, நண்பர்கள் எல்லாம் அவனை எப்படி காப்பற்றுகிறார்கள் என்பதே மீதிக் கதை.

    நட்பின் உன்னதத்தையும், மனித நேயத்தையும் முன்னிறுத்தி குணா படத்தின் கண்மணி அன்போடு காதலன் பாட்டுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்ததே இப்படத்தின் முக்கிய வெற்றி. சமீபத்தில் நடந்த நேர்காணலில் பிருத்திவிராஜ் சுகுமாரன் எப்படி மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு போன்ற மலையாளப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் மலையாளப் படங்கள் மீது ஒரு எதிர்பார்ப்பும், வெற்றி பெற உதவியும் செய்கிறது என்று விவரித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    ×