search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boy kidnapping case"

    • என்னை இந்த வழக்கில் தொடர்புப்படுத்தி அவரது கணவருக்கும் எனக்கு தொர்பு உள்ளதாக ஜெயலட்சுமி பொய் புகார் கொடுத்துள்ளார்.
    • மீண்டும் ராஜலட்சுமியிடம் எனது சொத்தில் ஒரு பகுதியை அடமானம் வைத்து ரூ. 15 லட்சம் பெற்றுக் கொண்டேன்.

    மதுரையில் ரூ. 2 கோடி கேட்டு பள்ளி மாணவர் கடத்தப்பட்ட வழக்கு விவகாரத்தில் தேடப்பட்டு வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி குஜராத்தில் தனது கணவர் குடியிருந்து வரும் ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

    அவர் தனது சாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என தற்கொலைக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டானின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பெயர்களை குறிப்பிட்டு மரண வாக்குமூலம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த மரண வாக்குமூலத்தில் எழுதியிருப்பதாவது:-

    எனது பெயர் சூர்யா என்றும், மதுரையில் கடந்த 11-ம் தேதி மாணவன் கடந்தப்பட்ட வழக்கில் எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. தனக்கு அந்த சம்பவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அதில் சம்பந்தப்பட்டவர்களை நான் இதுவரை பார்த்ததுகூட இல்லை. என்னை ஏன் இந்த வழக்கில் ராஜலட்சுமி சம்பந்தபடுத்தினார் என்று புரியவில்லை. என்னை இந்த வழக்கில் தொடர்புப்படுத்தி அவரது கணவருக்கும் எனக்கு தொர்பு உள்ளதாக ஜெயலட்சுமி பொய் புகார் கொடுத்துள்ளார்.

    அவரது கணவர் பெயர் கூட எனக்கு தெரியாது. கடந்த ஆண்டு ஐகோர்ட்டு மகாராஜா மூலமாகதான் ராஜலட்சுமி எனக்கு அறிமுகம் ஆனார். அவர்கள் இருவருக்கும் கொடுக்கல் வாங்கல் வட்டி தொழில் உள்ளது. ராஜலட்சுமி வட்டி தொழில் செய்பவர். எனது பெயர் உபயோகித்து ராஜலட்சுமியிடம் ஐகோர்ட்டு மகாராஜா ரூ. 60 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு ஓடிவிட்டார்.

    அந்த பணம் குறித்து எனது கணவரிடம் கூறுவதாக ராஜலட்சுமி தெரிவித்ததால் மகாராஜா வாங்கிய ரூ. 60 பணத்தை நான் தருகிறேன் என்று ஒப்புக் கொண்டதன் பேரிலும் மேலும் எனக்கு கடன் பிரச்சனை இருந்ததால், மீண்டும் ராஜலட்சுமியிடம் எனது சொத்தில் ஒரு பகுதியை அடமானம் வைத்து ரூ. 15 லட்சம் பெற்றுக் கொண்டேன்.

    அந்த பணத்திற்கு வட்டி எடுத்துக் கொண்டு பணத்தை கொடுத்தது மட்டுமல்லாமல், ஐகோர்ட் மகாராஜா வாங்கிய ரூ. 60 லட்சம் மற்றும் நான் வாங்கிய ரூ. 15 லட்சம் ஆகியவற்றை வட்டியும் முதலுமாகராஜலட்சுமி தனது மாமன் மகன் ஒருவரை அழைத்துவந்து 1.35 கோடி தரவேண்டும் என மிரட்டியதுடன் எனது பியூட்டி பார்லரையும் எழுதி வாங்கி கொண்டார்.

    அதன் பின்பும் எனது பியூட்டி பார்லர் 80 லட்சம் வரும் மீதம் உள்ள பணத்தை கொடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்தனர்.

    இதனால் எனது வாழ்வாதாரம் இழந்து கணவர் மற்றும் குழந்தைகளை இழந்து பெங்களூர் சென்று படிக்க நினைத்தேன். தொடர்ச்சியாக என்னை பணம் கேட்டு சித்திரவதை செய்தார்கள். என்னிடம் உள்ள அனைத்தையும் எழுதி வாங்கிக் கொண்டு என்னை ஏமாற்றும் நோக்கில் தற்போது சிறுவன் கடத்தல் வழக்கில் எனது பெயரை ராஜலட்சுமி சேர்த்துள்ளார். இதில் யார் ஈடுபட்டார்கள் என்றும், அவர்களது பெயர் கூட எனக்கு தெரியாது. வேண்டுமென்றால் எனது செல்போன் உரையாடலை சேகரித்து சோதனை செய்து பாருங்கள்.

    மேலும் இறந்து போன மைதிலி ராஜலட்சுமி கணவர் ராஜ்குமாருக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

    அப்படி புகார் தெரிவித்திருக்கும் பட்சத்தில் எனது செல்போன உரையாடலை ஆய்வுபடுத்துங்கள், ஐகோர்ட்டு மகாராஜா ஜெயிலில் இருந்து ஓடிபோன பிறகு ராஜலட்சுமியுடன் தொடர்பில் இருந்தார். ராஜலட்சுமியை பார்க்க கடந்த ஏப்ரல் 20 முதல் 25 வரை ராஜட்சுமி வீட்டிற்கு அடிக்கடி மகாராஜா வந்தார். அதுபற்றி சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தால் உண்மை தெரிந்துவிடும்.

    மேலும் குழந்தை கடந்தல் எவ்வளவு பெரிய குற்றம் என்று எனக்கு தெரியும். எனக்கும் 2 குழந்தைகள் இருக்கு. குழந்தைகளை பிரிந்து வாழும் வலி என்ன என்று எனக்கு தெரியும். ஐயா நான் என் தவறை திருத்ததான் வெளியூர் சென்று படித்து பெரிய ஆள் ஆக வேண்டும் என நினைத்தேன். எனது கணவர் என் நன்னடத்தை பார்த்து மன்னித்து என்னை சேர்த்துக் கொள்வார். நான் குழந்தை கடத்தல் செய்தேன் என்று கூற ஆதாரம் வேண்டும். இன்று எனது கணவர் பெயர், எனது புகைப்படம் டிவியில் வந்துள்ளது.

    நாளை நான் குற்றமற்றவள் என்று நிருபிக்கப்பட்டால் எனது மானம், எனது கணவர் மானம் திரும்ப கிடைக்குமா ஐயா, ஏன்றாவது சேர நினைத்த எனது வாழ்க்கை திரும்ப கிடைக்குமா ஐயா.. நீதி வேண்டும் ஸ்டாலின் ஐயா உங்கள் ஆட்சியை நான் பார்த்து வருகிறேன்... நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். நான் உங்கள் வீட்டு பெண்ணாய் இருப்பின் என்னை என்றாவது ஒருநாள் மேடையில் சூர்யா நிரபராதி என்று ஸ்டாலின் ஐயா மற்றும் உதயநிதி ஐயா சொல்லுங்கள்.

    எனது ஆத்மா ஸ்டாலின் ஐயா, உதயநிதி அண்ணாவை வாழ்த்தும். எனது கணவர் மிகவும் நல்லவர் அவரையும், குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளுங்கள். எனது குழந்தையிடம் உனது தாய் நல்லவள் என்று கூறுங்கள் என அந்த மரண வாக்கு மூலத்தில் கூறிபிட்டுள்ளார்.

    சென்னை புளியந்தோப்பு அருகே சிறுவனை கடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    புளியந்தோப்பு போகிப் பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்-துர்கா தேவி தம்பதியின் மகன் அஜய் (3).அதேபகுதியில் உள்ள மாநகராட்சி உருது படித்து வந்தான். நேற்று காலை பள்ளிக்கு சென்றான்.

    அப்போது பள்ளிக்கு வந்த ஒரு பெண் தான் சிறுவனின் அத்தை தேவி என்று கூறி மாணவனை அழைத்தார். இதை உறுதி செய்வதற்காக தன்னிடம் இருந்த போனில் சிறுவனின் தாய் பேசுவதாக ஆசிரியையிடம் தெரிவித்தார்.

    அதில் பேசிய பெண், தன் மகன் அஜய்யை அத்தையுடன் அனுப்பி வைக்கும்படி கூறினார். இதை நம்பிய ஆசிரியை மாணவன் அஜய்யை அந்த பெண்ணுடன் அனுப்பி வைத்தார்.

    மாலையில் மகன் அஜய் வீடு திரும்பாததால் உறவினர் வீடுகளில் தாயும், தந்தையும் தேடினார்கள். பள்ளிக்கு சென்று கேட்ட போது பையனின் அத்தை தேவி என்று கூறி அழைத்து சென்றதை தெரிவித்தனர். 2 பெண்கள் சேர்ந்து மாணவனை கடத்தியது தெரியவந்தது.

    இதுகுறித்து புளியந்தோப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். பள்ளியின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

    அப்போது பள்ளிக்கு வந்த பெண் ஏற்கனவே பிரகாஷ் வீட்டில் கூலிவேலை செய்த குட்டியம்மாள் என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று இரவு 1 மணி அளவில் அந்த பெண் வசிக்கும் வியாசர்பாடி கணேசபுரத்துக்கு போலீசார் சென்றனர்.

    அங்கு குட்டியம்மாள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோவில் சிறுவன் அஜய் தூங்கிக் கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே சிறுவனை மீட்டனர்.

    அவனை கடத்தி வந்த குட்டியம்மாள் (38), அவருடைய மகள் ஐஸ்வர்யா (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பெண்ணிடம் விற்பதற்காக சிறுவன் அஜய்யை குட்டியம்மாளும் அவருடைய மகள் ஐஸ்வர்யாவும் கடத்தியது தெரிய வந்தது.மீட்கப்பட்ட சிறுவன் அஜய்யை பெற்றோரிடம் புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ரவி ஒப்படைத்தார்.

    ×