search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bride death"

    • இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று காலை திருமணம் நடந்தது.
    • 2 பேரும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவின் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கெம்பாபுராவை அடுத்த செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் லிகிதா ஸ்ரீ (20). இவர்கள் 2 பேரும் காதலித்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று காலை திருமணம் நடந்தது.

    இதையடுத்து மதியம் புதுமணத்தம்பதிகளை முனியப்பபாவின் வீட்டில் இருந்த ஒரு அறையில் தனியாக வைத்தனர். அப்போது தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர். 2 பேரும் ரத்த காயத்தில் சுருண்டு விழுந்து கிடந்தனர். இதையடுத்து குடும்பத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் லிகிதா ஸ்ரீ உயிரிழந்தார். இதையடுத்து குடும்பத்தினர் நவீன் குமாரை மீட்டு கோலார் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நவீன் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விசாரணையில் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் 2 பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதில் அவர்கள் 2 பேரும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர்.

    இதில் கத்திக்குத்து காயம் அடைந்த லிகிதா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நவீன் குமார் படுகாயம் அடைந்தது தெரியவந்தது. தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுமண தம்பதி இடையே ஏற்பட்ட தகராறுக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ஆண்டர்சன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான சில மணி நேரத்திலேயே புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில், காதல் மனைவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அறந்தாங்கி அருகே திருமணமான 6 நாளில் புதுப்பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள திருநாளுர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 34). தஞ்சாவூர் மாவட்டம் வலப்பிரமன்காட்டை சேர்ந்த அசோகன் மகள் நித்யா (24). இவர் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு கடந்த 12-ந்தேதி திருநாளுரில் திருமணம் நடைபெற்றது. 

    இதையடுத்து நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தனர். அப்போது கணவன், மனைவிக்கு இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து சுந்தர்ராஜனின் உறவினர்கள் நித்யாவின் தந்தைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். 

    உடனே வலப்பிரமன்காட்டில் இருந்து நித்யாவின் தந்தை அசோகன், தாய், தம்பி ஆகியோர் திருநாளுருக்கு மோட்டார் சைக்கிளில் நேற்று அதிகாலை வந்தனர். அவர்கள் சுந்தர்ராஜன், நித்யா ஆகியோரை சமாதானம் செய்தனர். தொடர்ந்து நித்யாவை தங்களுடன் வலப்பிரமன் காட்டுக்கு அனுப்பி வைக்கும்படி அசோகன், சுந்தர்ராஜனிடம் கூறினார். இதையடுத்து சுந்தர்ராஜன், நித்யா ஒரு மோட்டார் சைக்கிளிலும், நித்யாவின் தந்தை அசோகன், தாய், தம்பி ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் திருநாளுரில் இருந்து வலப்பிரமன்காட்டிற்கு புறப்பட்டு வந்தனர். 

    அங்கு மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி தனது வீட்டிற்குள் சென்ற நித்யா சிறிது நேரத்தில் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக நித்யாவை சிகிச்சைக்காக பேராவூரணியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், நித்யா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து நித்யாவின் உடல் திருநாளுரில் உள்ள சுந்தர்ராஜன் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந் ததும் அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் நித்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து நித்யாவின் தந்தை அசோகன் அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்யா மர்மச்சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 6-வது நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்ததால் அறந்தாங்கி ஆர்.டி.ஓ. பஞ்சவர்ணமும் விசாரணை நடத்தி வருகிறார். 

    கணவர்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் நித்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னர் தான் நித்யா எவ்வாறு இறந்தார் என்பது தெரியவரும். திருமணமான 6 நாளில் புதுப்பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    போத்தனூரில் சமையல் செய்வதற்காக ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்த பெண் மீது ஸ்டவ் வெடித்து சிதறியது. இதில் காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

    கோவை:

    போத்தனூர் பாரதிநகரை சேர்ந்தவர் நாகராஜ். கார் டிரைவர். இவரது மனைவி அமலா (வயது 21). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சம்பவத்தன்று அமலா வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    சமையல் செய்வதற்காக ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர் பாராதவிதமாக ஸ்டவ் வெடித்து சிதறியது.

    இதில் அமலாவின் உடலில் தீப்பற்றி படுகாயம் அடைந்து கதறினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக் காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்

    இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    ×