search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "buffaloes"

    • சுமார் 20 நிமிடம் சண்டையிட்ட காட்டெருமைகள்.
    • யானை வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டெருமைகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் குன்னூர் ஜிம்கானா கோல்ப் விளையாட்டு மைதானத்தில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சுமார் 20 நிமிடம் சண்டையிட்ட காட்டெருமைகளை அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இந்த காட்சிகளை செல்போனில் படம் ஒருவர் இதனை சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளார்.

    நீலகிரி மாவட்டம், குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளதால், சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் அவ்வப்போது சாலைப் பகுதிக்கு வந்து செல்கின்றன. இதில் ஒற்றைக் கொம்பு ஆண் காட்டு யானை ஒன்று கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம்-குன்னூா் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து சாலைகளில் நடமாடி வருகிறது.

    இந்த ஒற்றைக் கொம்பு யானை, காட்டேரி குடியிருப்பு பகுதி மற்றும் கிளன்டேல் எஸ்டேட் பகுதியில் நடமாடியது. மேலும், சில நேரங்களில் சாலையில் நடமாடும் இந்த யானை வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

    எனவே ஒற்றைக் கொம்பு யானையால் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க 15 போ் கொண்ட வன ஊழியா்கள் பணி அமா்த்தப்பட்டு கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தி உள்ளதாக குன்னூா் வனச்சரகா் ரவீந்தரநாத் தெரிவித்துள்ளாா்.

    • 10 நிமிட தாமதத்திற்கு பிறகு ஊட்டி புறப்பட்டு சென்றது.
    • 25-க்கும் மேற்பட்ட காட்டு எருமைகள் நின்று கொண்டு இருந்தன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தின் அடையாளமாக மலை ெரயில் சேவை திகழ்ந்து வருகிறது. இது அடா்ந்த வனப் பகுதி வழியாக குறைந்த வேகத்தில் செல்லும். எனவே மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

    இந்த நிலையில் அந்த ரெயில் நேற்று காலை குன்னூரில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டது. அப்போது டிரைவர் கணேசன் ரெயிலை இயக்கினார். குன்னூரில் இருந்து புறப்பட்ட மலை ரெயில் வெலிங்டன் மேம்பாலப் பகுதி அருகே வந்தது. அப்போது, தண்டவாளத்தின் குறுக்கே 25-க்கும் மேற்பட்ட காட்டு எருமைகள் நின்று கொண்டு இருந்தன. இதனை தற்செயலாக பார்த்த டிரைவர் கணேசன் அதிர்ச்சி அடைந்தார். எனவே அவர் உடனடியாக பிரேக் போட்டு மலை ெரயிலை நிறுத்தினாா். அதன்பிறகு அவா் ரயிலில் இருந்து இறங்கி சென்று தண்டவாளத்தின் குறுக்கே நின்ற காட்டு எருமைகளை காட்டு ப்பகுதிக்குள் விரட்டி னாா். அதன்பிறகு குன்னூ ரில் இருந்து புறப்பட்ட மலை ரெயில், சுமார் 10 நிமிடம் தாமதமாக ஊட்டி க்கு புறப்பட்டு சென்றது.

    ×