search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Camphor leaf"

    • கற்பூரவல்லி மிகச் சிறந்த மருத்கதுவம் கொண்டர் மூலிகை.
    • வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

    கற்பூரவல்லி மிகச் சிறந்த மருத்கதுவம் கொண்டர் மூலிகை. இது ஓமவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. கற்பூரம் மற்றும் ஓமம் நறுமணம் உள்ள இந்த செடியின் இலைகள் நீர்ச்சத்து நிறைந்து தடித்து இருக்கும். இதன் இலைகளில் உள்ள கார் வாக்ரால், தைமால் மற்றும் பீட்டா காரோபைலின் போன்ற வேதியியல் பொருட்கள், இலைகளின் நறுமணம் மருத்துவ குணங்களுக்கு காரணமாகின்றன.

    குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு ஒவ்வாமையால் உண்டாகும் தும்மல் மற்றும் சளி, இருமலுக்கு கற்பூரவல்லி அருமருந்து. தோலில் உண்டாகும் ஒவ்வாமை, தோலில் ஏற்படும் கானாக்கடி போன்ற தடிப்புக்கும் இதன் இலையை தோலில் தேய்க்கலாம். கற்பூரவல்லி சருமத்துக்கு நல்ல மருந்து.

    குழந்தைகளுக்கு பருப்புசாதத்தில் ஒரு கற்பூரவல்லி இலையைக் கலந்து பிசைந்து ஊட்டலாம். அப்போது உணவு நன்கு ஜீரணமாகும்.

    கற்பூரவல்லிச் செடியை மிக எளிதாக தொட்டிகளில் வளர்க்கலாம். செடியின் தண்டை உடைத்து நட்டால் புதுச்செடி வளர்ந்து விடும்.

    தேவையான பொருட்கள்:

    கற்பூரவல்லி இலை- 30

    கறுப்பு உளுந்து- 1 ஸ்பூன்

    மிளகாய் வற்றல்- 4

    தேங்காய்த் துருவல்-4 ஸ்பூன்

    புளி- எலுமிச்சை அளவு

    உப்பு- சுவைக்கேற்ப

    பெருங்காயம் தூள்- 1 ஸ்பூன்

    நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, புளி, உளுந்து, மிளகாய்வற்றலை வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கற்பூரவல்லி இலைகளை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். சற்று ஆறிய பின் தேங்காய்த் துருவல் கலந்து மிக்சி ஜாரில் போட்டு அரைத்து அதன்பின் உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து கலக்க வேண்டும். சுவையான கற்பூரவல்லி சட்னி ரெடி.

    இந்த சட்னி செய்வதற்கு தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. இந்த சட்னி சுவையாக இருக்கும். இட்லி,தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். சூடான சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.

    வித்தியாசமான சுவையுடன் இருக்கும். சளி, இருமல், அஜீரணம், ஆஸ்துமா போன்ற நோய்களால் அவதிப்படுபவர்கள் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.

    ×