என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cannabis plants"
- வீட்டின் பின்புறத்தில் இருந்து சுமார் 4 அடி வரை வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை கைப்பற்றினர்.
- தடை செய்யப்பட்ட வெடிமருந்துகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் அதிகப்படியான கஞ்சா புழக்கம் இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தொடர்ந்து புகார் வந்தவண்ணம் இருந்தது. கடந்த வாரம் ஊட்டி பகுதியில் கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவத்தால் கஞ்சாவை மாவட்டத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடம் இருந்து வலுவான கோரிக்கை எழுந்தது.
இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தலைமையிலான சிறப்பு போலீசார்கள் கஞ்சா வேட்டையில் இறங்கினர். இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி கண்ணெரிமுக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் ரகுமா ன்காண், முஜாஹிர், சரவ ணன், சிவமணிகண்டன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சபீர்கான் ஆகியோர்கள் மோகன் என்பவரின் வீட்டின் பின்புறத்தில் இருந்து சுமார் 4 அடி வரை வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை கைப்பற்றினர்.
பின்பு போலீசார் அவரது வீட்டில் மேலும் கஞ்சா செடிகள் இருக்கிறதா? என்று சோதனை செய்தபோது அவரது வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட பாறைகளை உடைக்கும் வெடிமருந்துகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்பு அவரிடமிருந்து சுமார் 125 கிராம் கொண்ட 5 வெடிமருந்து நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், மருந்துகளை வெடிக்க வைக்கும் ஒயர்கள் போன்றவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 5 கிலோ சிக்கியது
- பெண் உட்பட 2 பேர் கைது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அருகே உள்ள பீஞ்சமந்தை மலை கிராமத்தில் வேப்பங்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
கஞ்சா செடிகள்
அப்போது விவசாய நிலத்தில் கஞ்சா வாசனை வந்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்று பார்த்த போது மிளகாய் செடிகள் இருந்துள்ளன. சற்று உள்ளே சென்று பார்த்த போது கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதன்பின்னர் மிளகாய் தோட்டத்தில் பயிரிட்டு இருந்த 2.5 கிலோ எடை கொண்ட கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். அருகில் இருக்கும் மற்றொரு நிலத்தில் தேடிப்பார்த்த போது அங்கும் கஞ்சா செடிகள் இருப்பது தெரியவந்தது.
அங்கு இருந்த 2.5 கிலோ கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் 5 கிலோ கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் பயிரிடப்பட்ட நிலத்தின் உரிமையாளர் கமலா(வயது45), மற்றொரு நிலத்தின் உரிமையாளர் முத்துக்குமார் (21) என்ற 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்