search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central Government Schemes"

    • மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் குறைபாடு உள்ளதாக கவர்னர் ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
    • இந்த திட்டத்தை சில தலைவர்கள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் 18 வகை கைவினை கலைஞர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு கலந்துரை யாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

    விவசாயமும், தொழிலும் இல்லாமல் இந்த நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியாது. விஸ்வ கர்மா யோஜனா திட்டத்தை பிரதமர் தைரி யமாக அறிமுகப்படுத்தி யுள்ளார். இந்த திட்டத்தை சில தலைவர்கள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. உறுதியான பாரதம் உருவாக விஸ்வ கர்மா கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அதனை பிரதமர் செயல்படுத்தி யுள்ளார். இந்த திட்டத்தின் முழு நோக்கம் கைவினை கலைஞர்களின் வாழ்வா தார மேம்பாடு தான்.

    மத்திய அரசு பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பிற்படுத்தப்ப ட்டோருக்கான வீடு கட்டும் திட்டத்தில் 40 சதவீத நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் நிறைய குறைபாடுகள் உள்ளன. மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். ஆனால் மக்களிடம் நினைத்த தொழிலை தொடங்கு வதற்கான விழிப்புணர்வு இல்லை. பொதுமக்களின் குறைகளை மத்திய-மாநில அரசுகளிடம் எடுத்துச் சொல்ல முயற்சிப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் விஸ்வகர்மா நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் அட்டைகளை வழங்கினர்.
    • மத்திய அரசு நமக்கு எவ்வளவு திட்டங்களை வழங்குகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மத்திய, மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.

    விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் அட்டைகளை வழங்கினர்.

    மீனவ மக்கள் கேட்ட அத்தனை திட்டங்களையும் அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசு நமக்கு எவ்வளவு திட்டங்களை வழங்குகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    நேரடி வங்கி பரிமாற்றத்தால் அவர்கள் வழங்குகின்ற நிறைய திட்டங்கள் நமக்கு தெரிவதில்லை. திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதே நமது எண்ணம். நாங்கள் எதிர்பார்த்த நிதியை விட கூடுதல் நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைத்து, அதன் மூலம் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    காலாப்பட்டு பகுதியில் கடல் அரிப்பினால் பல வீடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. கற்கள் கொட்ட வேண்டும் என்றுகேட்கின்றனர். இதை ஆய்வு செய்யும் பணி ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை மூலம் விரைவில் கடல் அரிப்பை தடுக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி, காரைக்காலில் மீன்பிடி துறைமுகம் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். மாகியில் மீன்பிடித் துறைமுகப் பணி முடிக்கப்படாமல் உள்ளது. அதனை முடிக்கவும், ஏனாம் பகுதி மீனவ மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

    கடல் அரிப்பை தடுப்பதற்கான நிதி உள்பட அனைத்து நிதியும் நமக்கு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×