search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central Industrial Security Force"

    • பாராளுமன்றத்தில் திமுக எம்.பி எம்.எம்.அப்துல்லாவை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் (CISF) தடுத்து நிறுத்தினர்.
    • இந்தியா கூட்டணி எம்.பிக்களை பணி செய்ய விடாமல் தடுப்பதற்காகவே பாராளுமன்றம் பாதுகாப்பு மத்திய பாதுகாப்பு படைக்கு மாற்றப்பட்டதா?

    நேற்று பாராளுமன்றத்தில் நுழைந்த திமுக மாநிலங்களவை எம்.பி எம்.எம்.அப்துல்லாவை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் (CISF) தடுத்து நிறுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக மாநிலங்களை சபாநாயகர் ஜெகதீப் தன்கருக்கு எம்.பி எம்.எம்.அப்துல்லா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், "பாராளுமன்றவளாகத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் என்னிடம் நடந்து கொண்ட வேதம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு முன்னர் பாராளுமன்ற பாதுகாப்பு படையினர் இருக்கும் பொழுது இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றது கிடையாது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வ வேலைகள் இல்லாமல் வேறு வேலைகளுக்காக கூட பாராளும்னறத்தில் நுழைய உரிமை உண்டு என்று நான் நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் திமுக எம்.பி பாராளுமன்றத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பாராளுமன்றத்தில் மத்திய பாதுகாப்பு படை (CISF) வீரர்களால் திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா கூட்டணி எம்.பிக்களை பணி செய்ய விடாமல் தடுப்பதற்காகவே பாராளுமன்றம் பாதுகாப்பு மத்திய பாதுகாப்பு படைக்கு மாற்றப்பட்டதா? மக்கள் பிரதிநிதியான மாநிலங்களவை உறுப்பினரை ஏன் பாராளுமன்றம் செல்கிறீர்கள் எனக் கேட்டது கண்டனத்துக்குரியது" என்று தெரிவித்துள்ளார்.

    இந்தாண்டு மே மாதம் பாராளுமன்ற பாதுகாப்பது பணியை பாராளுமன்ற பாதுகாப்பு படையிடமிருந்து மத்திய பாதுகாப்பு (CISF) படைக்கு மாற்றியதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

    • சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான பயிற்சி நிறைவு விழா
    • டி.ஐ.ஜி. சாந்தி, ஜி.ஜெய்தேவ் பங்கேற்பு

    அரக்கோணம்:

    அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் 42 பேருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சி நிறைவு விழா பயிற்சி மைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மைய முதல்வர் டி.ஐ.ஜி. சாந்தி ஜி ஜெய்தேவ் கலந்து கொண்டு வீரார்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு பேசினார்.

    அப்போது அவர் இன்று ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம் பம். உண்மைத் தன்மை, விசுவாசம், நம்பகத்தன்மையின் நெறிமுறைகள், தைரியம், நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகி யவற்றின் மதிப்புகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் வழிகாட் டும் கலங்கரை விளக்கமாக மாற வேண்டும் என்று பேசினார்.

    தொடர்ந்து பயிற்சியின்போது சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள், கோப்பை வழங்கி பாராட்டினார். பயிற்சி நிறைவு செய்த வீரர்கள் நாட்டின் பல இடங்களில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள், அணுசக்தி நிலையங்கள் மற்றும் விண்வெளி மையங்கள் போன்ற இடங்க ளுக்கு பணிக்கு செல்கிறார்கள்.

    நிகழ்ச்சியில் அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் பயிற்சி மைய கமாண்டன்ட், மத்திய தொழிற் பாதுகாப்பு படை அதிகாரிகள், வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    ×