search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chariot festival Community-verified icon Verified"

    • பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
    • முக்கிய வீதிகளில் வலம் வந்தது

    சோளிங்கர்:

    சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் சோளிங்கர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்தி ருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் சோளிங்கர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

    கோவில் இணை ஆணையாளர் ஜெயா, சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம், முன்னாள் எம்.பி. சி.கோபால், முன் னாள் எம்.எல்.ஏ.பார்த்திபன், சோளிங்கர் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன், துணைத் தலைவர் பழனி உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் நடந்தது
    • மருத்துவ முகாம் அமைத்து தர வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் தாசில்தார் வேண்டா தலைமையில் நடைப்பெற்றது.

    கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.இக்கூட்ட த்தில் நாளை (புதன்கிழமை )நடைபெறும் தேர் திரு விழாவின் போது தேர் செல்லும் வீதிகளில் தேர் புறப்படுவதற்கு முன்னதாக அனைத்து மின் வயர்களை அகற்றி தேரோட்டம் முடிந்தபின் இணைப்பு வழங்க வேண்டும் தேர் திருவிழா தவிர இதர திருவிழாவின் போது மும்முனை மின்சாரம் தடையின்றி சீராக வழங்க வேண்டும்.

    பள்ளிகொண்டா பேரூராட்சி சார்பில் தேர் செல்லும் வீதிகளில் பாதைகள் சீராக அமைத்தல், இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், கோவில் சு ற்றிலும் குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வினி யோகம் செய்து தருதல், உயர்மின் கோபுர விளக்கு களை பழுது நீக்கி சீரமைத்து தர வேண்டும்.

    சுகாதாரத்துறை சார்பி ல் மருத்துவ முகாம் அ மைத்து தர வேண்டும். 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பு வாகனம் கோவில் முன்பு நிறுத்த வேண்டும். தேரோட்டத்தின் போது பொதுமக்கள் தேர் சக்கரத்தின் அருகே செல்லாமல் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் கணக்காளர் சரவணபாபு, கோவில் மணியம் ஹரி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

    இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×