search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Class room"

    • அம்மையகரம் அரசு உயர்நிலை பள்ளிக்கு கலெக்டர் பிரசாந்த் சென்றார்.
    • சின்னசேலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 2 பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு ஒரு அதிகாரி என நியமனம் செய்யப்பட்டு உள்ளது.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்ட முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் சின்னசேலம் பேரூராட்சி, பூண்டி, அமையாகரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அரசு அலுவலகங்கள்,ரேஷன் கடை கிராம நிர்வாக அலுவலகங்கள், இ-சேவை மையம் உள்ளிட்ட அரசு அலுவலர்களில் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து கலெக்டர் பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டார்.

    அம்மையகரம் அரசு உயர்நிலை பள்ளிக்கு கலெக்டர் பிரசாந்த் சென்றார். அப்போது அப்பள்ளியில் 6-ம் வகுப்பில் ஆங்கில பாடம் நடைபெற்று கொண்டிருந்தது. அதனை மாணவர்களுடன் அமர்ந்து கலெக்டர் பிரசாந்த் கவனித்தார். மேலும் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார்.

    இன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரை சின்னசேலம் தாலுக்கா அலுவலகத்தில் சின்னசேலம் பேரூராட்சி மற்றும் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களிடம் மனுக்களை வாங்குகிறார்.

    சின்னசேலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 2 பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு ஒரு அதிகாரி என நியமனம் செய்யப்பட்டு உள்ளது. அந்த அதிகாரியிடம் மாலை கிராம மக்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று தங்களுடைய குறைகளை மனுக்களாக கொடுக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். 

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பள்ளி ஒன்று பழுதான வகுப்பறைகள் இடிக்கப்பட்டதால் 10 மாதமாக கோவிலில் இயங்கி வருகிறது.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் மோடிகுப்பம் ஊராட்சி மத்தேட்டிபல்லி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 75 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

    ஆரம்ப காலத்தில் ஓலை வேய்ந்த கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த பள்ளிக்கு 1967-ம் ஆண்டு கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் பராமரிப்பின்றி பழுதடைந்து விட்டது. எனவே புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து 10 மாதங்களுக்கு முன்பு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ஏதுவாக பழுதடைந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. தற்போது அந்த பள்ளி வளாகத்தில் சத்துணவு மையம் மட்டுமே இயங்கி வருகிறது. பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டதால் அருகில் உள்ள பாட்டசாரி கெங்கையம்மன் கோவிலில் தற்காலிகமாக பள்ளி இயங்கி வருகிறது.

    புதிய கட்டிடம் விரைந்து கட்டி கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை கட்டிடம் கட்டி கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக அருகில் உள்ள கோவிலிலேயே பள்ளி இயங்கி வருகிறது.

    நடவடிக்கை எடுக்க வேண்டும் இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘தனியார் பள்ளி மோகம் அதிகரித்துள்ள நிலையில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு பள்ளிகளையே நம்பி உள்ளனர். தமிழக கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு விரைவில் பள்ளி கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

    அதிகாரிகளிடம் கேட்டபோது இன்னும் சில தினங்களில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளது என்றனர். #tamilnews
    ×