search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress government"

    • பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
    • ஊரக பகுதிகளுக்கு தனி அலுவலர்களை அரசு நியமனம் செய்துள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கான பதவிக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதியுடன் நிறைவடைந்தது.

    அதேபோல மண்டல வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஜில்லா அளவிலான வார்டு உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் கடந்த 3-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதனால் தெலுங்கானாவில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மொத்தமுள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் 8 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதை பின்னடைவாக காங்கிரஸ் அரசு பார்க்கிறது.

    இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த காங்கிரஸ் தயக்கம் காட்டி வருகிறது. ஊரக பகுதிகளுக்கு தனி அலுவலர்களை அரசு நியமனம் செய்துள்ளது.

    எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசை கலைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மீண்டும் மத்தியில் அமைய உள்ளது. மோடி அரசு இன்று மாலை பதவியேற்க உள்ள நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 

    பா.ஜனதா மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும் முன்னதாகவே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுக்கு தொல்லை கொடுக்கிறது, அரசை கலைக்க முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டியுள்ளார். 

    பிரதமர் மோடியின் தலைமையிலான புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அசோக் கெலாட், புதிய அரசை அமைப்பதற்கு முன்னதாகவே வெற்றி பெற்ற பா.ஜனதா, மேற்கு வங்காளம், கர்நாடகம், மத்திய பிரதேசம் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு தொந்தரவை கொடுக்கவும், கலைக்கவும் முயற்சிகளை மேற்கொள்கிறது எனக் கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று காங்கிரஸ் அரசை பா.ஜனதா வலியுறுத்துகிறது. 
    அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பாலத்தை காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவில்லை என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் மாவட்ட பாரதீய ஜனதா செயற்குழு கூட்டம் ராணி மகாலில் நடந்தது. மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    லிங்காரெட்டிபாளையம் சர்க்கரை ஆலை 4 ஆண்டுகளுக்கு மேலாக நிர்வாக சீர்கேடு மற்றும் நிதி முறை கேட்டால் சீரழிந்தது. மிகுந்த துயரத்திற்கு உள்ளான விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்கியும், தொழிலாளர்களுக்கு தரவேண்டிய 18 மாத சம்பளத்தையும் உடனே வழங்கி, திறன்மிக்க நிர்வாக அதிகாரியை நியமித்து ஆலையை விரைந்து திறக்க வேண்டும்.

    ஊசுடு ஏரி, கடந்த 30 ஆண்டுகளாக தூர் வாராப்படாமல் உள்ளதால் அதன் கொள்ளளவில் பாதிக்கும் மேல் குறைந்துவிட்டது. எனவே உடனடியாக ஏரியையும் மற்றும் அனைத்து பாசன வாய்க்கால்களையும் உடனடியாக தூர்வாரி நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்.

    உறுவையாறு சங்கரா பரணி ஆற்றின் தடுப்பணையை ஒரு மீட்டருக்கு உயர்த்தி, படகு குழாம் அமைத்து சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்.

    அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் அமைத்திட 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பணி இணைப்பு பாலத்திற்கு, மத்திய அரசு சார்பில் ரூ.29 கோடி நிதி ஒதுக்கியும், புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசு பாலம் அமைப்பதற்கான நிலத்தை இன்றைய தேதி வரை கையகப்படுத்தி கொடுக்காமல், தினம் தினம் ஏற்படும் விபத்து மற்றும் உயிர் இழப்புகளால் மக்கள் படும் அவதியை கண்டுகொள்ளாத மாநில அரசை கண்டிப்பதோடு, உடனடியாக நிலத்தை கையகப்படுத்தி மேம்பால பணியை விரைந்து முடித்திட வேண்டும்.

    மணல் தட்டுப்பாட்டை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×