search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK-Congress"

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசினார்.
    • ஒவ்வொரு தொகுதி யிலும் ராகுல்காந்தி தான் வேட்பாளர் என்று நினைத்து நீங் கள் தேர்தல் பணியாற்ற வேண்டும்.

    சிவகாசி

    சிவகாசியில் காங்கிரஸ் கட்சியின் விருதுநகர், தென்காசி பாராளுமன்ற தொகுதிகளின் வாக்குச் சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாடு நடை பெற்றது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாணிக்கம் தாகூர், எம்.பி. கலந்து கொண்டு பேசிய தாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தல் மிகவும் முக்கிய மானது. ஒவ்வொரு தொகுதி யிலும் ராகுல்காந்தி தான் வேட்பாளர் என்று நினைத்து நீங் கள் தேர்தல் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு வாக்குசாவடி யிலும் காங்கிரஸ் கட்சிக்கு தான் அதிக வாக்கு பதிவாகி இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் உழைக்க வேண்டும்.

    இந்த தேர்தல் இந்தியா கூட்டணிக்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும் நடக்கும் தேர்தல் ஆகும். பா.ஜ.க. மக்க ளிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் உள்ள அனை வரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் ராகுல் காந்தி பாதையாத்திரை மேற்கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான கருத்து கணிப்பில் 70 சதவீதம் மக்கள் ராகுல்காந்தி பிரத மராக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள் ளனர். வருகிற ேதர்தலில் அதிக இடங்களில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் விஜய் வசத்த் எம்.பி., தமிழ்நாடு சிறு பான்மை ஆணை யத்தின் தலைவர் பீட்டர் அல் போன்ஸ், முன்னாள் எம்.பி விஸ்வநாதன், அசோகன் எம்.எல்.ஏ.க்கள் ராதா கிருஷ்ணன், பழனி, ராஜேஷ்குமார், பிரின்ஸ், சிரஞ்சிவி, காமராஜர், ஸ்ரீராஜாசொக் கர், ரங்கசாமி, அம்மாபட்டி பாண்டியன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாணவர் காங்கிரஸ் தலை வர் சின்னதம்பி, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசியல்கட்சி பிரமுகர்கள், முக்கியஸ்தர்களுக்கு கவர்னர் தமிழிசை தேநீர் விருந்து அளித்தார்.
    • விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்க ணித்தனர்.

    புதுச்சேரி:

    சுதந்திர தினவிழாவை யொட்டி கவர்னர் மாளிகை யில் தியாகிகள், அரசியல்கட்சி பிரமுகர்கள், முக்கியஸ்தர்களுக்கு கவர்னர் தமிழிசை தேநீர் விருந்து அளித்தார்.

    இந்த விருந்து நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ. ஜெயக்குமார், செல்வ கணபதி எம்.பி, துணை சபாநாயகர் ராஜவேலு,

    எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், ஜான்குமார், கல்யாணசுந்தரம், அங்காளன், கே.எஸ்.பி..ரமேஷ், ரிச்சர்டு, லட்சுமி காந்தன், பாஸ்கர்,

    வி.பி.ராமலிங்கம், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், கருணாநிதி, தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, போலீஸ் டி.ஜி.பி சீனிவாஸ் மற்றும் அரசு செயலர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

    அதேநேரத்தில் கவர்னர் ஜனநாயத்துக்கு எதிராக அரசியல்கட்சி தலைவர் போல செயல்படுவதாக கூறி தி.மு.க, காங்கிரஸ் தேநீர் விருந்தை புறக்க ணிப்பதாக அறிவித்தி ருந்தனர்.

    இதன்படி தி.மு.க., காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கவர்னரின்

    தேநீர் விருந்தை புறக்க ணித்தனர்.

    ×