என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "dmk volunteer suicide"
பள்ளிப்பட்டு:
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தி.மு.க. தொண்டர்கள் சோகத்தில் உள்ளனர்.
கருணாநிதியின் உடல் நலக்குறைவை தாங்கிக் கொள்ள முடியாத எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த ராஜூ என்பவர் நேற்று திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது பள்ளிப்பட்டு அருகே மேலும் ஒரு தி.மு.க. தொண்டர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளிப்பட்டு அருகே உள்ள வாணிவிலாசபுரம், பழைய காலனியை சேர்ந்தவர் கங்கன் (வயது 65) தீவிர தி.மு.க. தொண்டர். அவர், கருணாநிதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது பற்றி நண்பர்கள், உறவினர்களிடம் அடிக்கடி மனவேதனையுடன் பேசி வந்தார்.
நேற்று இரவு அவர் உறவினர்கள் சிலரிடம் பேசியபோது தற்கொலை செய்யப்போவதாக கூறினார். அவரை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மனவேதனையில் இருந்த கங்கன் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். #DMKVolunteersuicide
சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் ராஜு (வயது 63). எண்ணூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தி.மு.க. தீவிர தொண்டரான இவர், திருவொற்றியூர் வட்ட செயலாளராக 3 முறை பதவி வகித்தவர். எண்ணூர் அனல் மின் நிலையத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளராகவும் இருந்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ராஜு மனம் உடைந்தார். இதனால் அவர், கடந்த 2 நாட்களாக சரியாக சாப்பிடாமல் இருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் ராஜு வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார். வெளியே சென்று இருந்த அவருடைய மனைவி வீட்டுக்கு வந்தபோது, தனது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி எண்ணூர் போலீசார் விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மனம் உடைந்த ராஜு, தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
நாமக்கல் மாவட்டம், ஒடுவன்குறிச்சியை சேர்ந்தவர் சிவசண்முகம் (64). தி.மு.க. தொண்டர். கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவலால் சிவசண்முகம் அதிர்ச்சி அடைந்தார். இதனால் சோகத்துடன் காணப்பட்ட அவர் மயங்கி விழுந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் டாக்டரை வரவழைத்து பரிசோதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே சிவசண்முகம் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்தவர் சபரிகிரிநாதன் (54). நீண்ட காலமாக தி.மு.க. தொண்டராக இருந்து வந்த சபரிகிரிநாதன், பாப்பான்குளம் 5-வது வார்டு துணை செயலாளராக பொறுப்பு வகித்தார். கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்ற தகவலை அறிந்த அவர் அதிர்ச்சியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் குள்ளக்காபாளையத்தை சேர்ந்தவர் அம்சகுமார் (65). குள்ளக்காபாளையம் ஊராட்சியின் 4-வது வார்டு தி.மு.க. அவைத்தலைவராக இருந்தார். கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அவர் வேதனையில் கடந்த 2 நாட்களாக சரிவர சாப்பிடாமலும், வீட்டை விட்டு வெளியே செல்லாமல் முடங்கி கிடந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். #KarunanidhiHealth
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்