search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EV Car"

    • ஹூண்டாய் க்ரெட்டா EV உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சோதனை செய்யப்பட்டது.
    • அடுத்த தலைமுறை டிசையர் இந்தியாவில் பலமுறை சோதனை செய்யப்பட்டு, வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் மற்றும் அடுத்த ஆண்டின் முற்பகுதியில், இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் 8 புதிய கார்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏராளமான புதிய கார்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

    இந்திய வாகனத் துறையின் முக்கிய நிறுவனங்களான மாருதி சுசுகி, ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா ஆகியவை புத்தம் புதிய கார்களை, பெரும்பாலும் SUVக்களைக் கொண்டுவருவதை இலக்காகக் கொண்டுள்ளன.

    1. மஹிந்திரா தார் அர்மடா & XUV.e8:

    மஹிந்திரா தார் ஆர்மடா ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் மூன்று எஞ்சின் ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய மாடல் மூன்று-கதவு மாடலை விட பெரியதாக இருக்கும். பெரிய தொடுதிரை, ADAS, டூயல்-பேன் சன்ரூஃப் மற்றும் டிஜிட்டல் கன்சோல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் மிகவும் ஆடம்பரமான இன்டியர் வேலைபாடுகளை கொண்டுள்ளது. கூடுதலாக, XUV.e8 மின்சார SUV இந்த வருட இறுதியில் அல்லது 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2. டாடா கர்வ் EV & ICE, Nexon iCNG:

    டாடா கர்வின் எலெக்ட்ரிக் மாடல், 500 கி.மீ.க்கு மேல் செல்லும் என எதிர்பார்க்கப்படும் ரேஞ்சில் வரும் மாதங்களில் வெளியிடப்பட உள்ளது. இந்த வெளியீட்டைத் தொடர்ந்து ICE பதிப்பு அறிமுகப்படுத்தப்படும். இது புதிய 1.2 லிட்டர் நேரடி-இன்ஜெக்ஷன் பெட்ரோல் எஞ்சின் மற்றும் Nexon இலிருந்து 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வரும். கூடுதலாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட Nexon iCNG, 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    3. ஹூண்டாய் க்ரெட்டா EV & Alcazar Facelift:

    ஹூண்டாய் க்ரெட்டா EV உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சோதனை செய்யப்பட்டது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது கோனா எலெக்ட்ரிக் உடன் மின்சார மோட்டாரைப் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் அதன் ICE இணையான க்ரெட்டாவிலிருந்து குறிப்பிடத்தக்க வடிவமைப்பு உத்வேகத்தைப் பெறும். இந்த நடுத்தர அளவிலான மின்சார SUV 450 கிமீ ரேஞ்சை வழங்கும் மற்றும் வழக்கமான க்ரெட்டாவைப் போன்ற உபகரணங்களைக் கொண்டிருக்கும். கூடுதலாக, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட அல்காசர் இந்த பண்டிகைக் காலத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளேயும் வெளியேயும் பல சீரமைப்புகளைக் கொண்டிருக்கும்.


    4. புதிய மாருதி சுசுகி டிசையர்:

    அடுத்த தலைமுறை டிசையர் இந்தியாவில் பலமுறை சோதனை செய்யப்பட்டு, வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது புதிய ஸ்விஃப்ட்டிலிருந்து குறிப்பிடத்தக்க வடிவமைப்பு டிசைன்களைப் பெறுகிறது. இருப்பினும் தனித்துவமான வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். இந்த வரிசையில் புதிய 1.2L Z-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின், மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    • டாடா நிறுவனத்தின் சியாரா மாடல் இந்தியாவில் அதிக பிரபலம்.
    • தனது சியாரா மாடலை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    கார் கம்பெனிகளில் முன்னோடியாக திகழ்கிறது டாடா நிறுவனம். டாடா நிறுவனத்தின் சியாரா மாடல் இந்தியாவில் அதிக பிரபலம். இந்த மாடலை வெளிவந்ததில் இருந்தே மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

    இதுவரை இந்தியாவில் பல்லாயிரத்திற்கு மேற்பட்ட சியாரா யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. சியாரா கார் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் கொண்ட மால்கள் கடந்த காலங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், தனது சியாரா மாடலை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி கடந்த 2020 மற்றும் 2023 ஆம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் டாடா மோட்டார்ஸ் சார்பில் அவர்களது சியாரா EV கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைத்தது. கடந்த ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட டாடா சியாரா EV கான்செப்ட் கிட்டத்தட்ட உற்பத்திக்கு தயாரான வடிவிலேயே காட்சியளித்தது.

    வருகிற 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சியெரா எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து, இதே காரின் பெட்ரோல்/ டீசல் எஞ்சின் ஆப்ஷன்களையும் விற்பனைக்கு கொண்டுவர டாடா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் 500-க்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது.
    • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களை கடந்த பத்து ஆண்டுகளாக உற்பத்தி செய்து வருகிறது.

    ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளர் பிஎம்டபிள்யூ இந்திய சந்தையில் தனது கார்களை எலெக்ட்ரிக் மயமாக்கும் பணிகள் துவங்கப்பட்டு விட்டதாக சமீபத்தில் அறிவித்தது. 2023 முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த ஒட்டுமொத்த கார்களில் 9 சதவீத யூனிட்கள் முழுமையான எலெக்ட்ரிக் மாடல்கள் ஆகும்.

    2025 வாக்கில் இந்த எண்ணிக்கை 25 சதவீதமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவு செய்து இருப்பதாக அந்நிறுவன தலைவர் விக்ரம் பாவா தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

     

    இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். 2023 முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் 500-க்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் i7, ix, i4 மற்றும் மினி SE போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களை கடந்த பத்து ஆண்டுகளாக உற்பத்தி செய்து வருகிறது. 

    ×